Header image alt text

காங்கேசன்துறை துறை முகத்தை புனரமைக்கவுள்ளதாக அறிவிப்பு

kankesanthuraiகாங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பு செய்து அபிவிருத்தி செய்வதன் ஊடாக வடபகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்று தருவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக துறைமுக அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா தெரிவித்தார். யாழ் காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை வருகை தந்த அமைச்சர், துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், புதிய அரசாங்கம் பாதுகாப்பு தேவைகளுக்கு தவிர ஏனைய காணிகளை பொது மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதேபோல காங்கேசன்துறை துறைமுகத்தை கடற்படையிடம் இருந்து பெற்று, வர்த்தக நோக்குக்காக அதனை புனரமைப்பு செய்து அபிவிருத்தி செய்வதன் ஊடாக வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முடியும். துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்ளவுள்ளதாக கூறினார்.

பெண்களும் பொது அமைப்புக்களும் இணைந்து கையெழுத்திட்டு தங்களின் கோரிக்கையை ஜனாதிபதிக்கு மகஜர் வடிவில் அனுப்பியுள்ளனர்.

poardamஇலங்கையில் கடந்த காலங்களில் நடந்துள்ள வன்முறைகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை புரிந்தவர்களுக்கு எதிராக சுதந்திரமானதும் நம்பகத்தன்மை உள்ளதுமான விசாரணைகளை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் 20 பொது அமைப்புக்களும் இணைந்து கையெழுத்திட்டு தங்களின் கோரிக்கையை ஜனாதிபதிக்கு மகஜர் வடிவில் அனுப்பியுள்ளனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியிலும் பல்வேறு ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரணைகளில் பங்கெடுத்தவர்கள் என்ற வகையிலும் தாங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Read more

ஜனாதிபதி – வடமாகாண முதலமைச்சர் சந்திப்பு

vikgi maithriதமிழ் மக்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்துவதே, வடமாகாணத்தின் இனப்படுகொலை தீர்மானமாகும் என்று வியாழனன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான நேரடி சந்திப்பின் போது எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, வடக்கு மற்றும் தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி சுதந்திரதின வைபவத்தில் ஆற்றிய உரையின் கருத்தை தமிழ் மக்கள் வரவேற்றிருப்பதாகவும், அத்தகைய உறவு விரைந்து ஏற்படுத்தப்பட வேண்டும் என தான் வலியுறுத்தியதாகவும். Read more

யாழ் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விடுவிப்பு

IMG_4137யாழ் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட  சுமார் 1,000 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காகவே இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அமைச்சரவை பத்திரித்துக்கே  அங்கிகாரம் கிடைத்துள்ளது என்று மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், Read more

இனப்படுகொலை என வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம். குற்றச்சாட்டை இலங்கை அரசு நிராகரிப்பு

fig-17இலங்கையின் வடமாகாணசபையில் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டு இழுபறி நிலையில் இருந்துவந்த இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பே என்கிற தீர்மானம் செவ்வாயன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையை, இனப்படுகொலையில் இருந்து தமிழ் மக்களைக் காப்பதற்கு சர்வதேச பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தலைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த ஆண்டு சபையில் சமர்ப்பித்திருந்தார்.
அப்போது, அந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் போதிய ஆதாரங்கள் கிடையாது, அதனை சபையில் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல என்ற வகையில் காரணங்கள் கூறப்பட்டிருந்தது. அதனையொட்டி கடும் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்று அந்தப் பிரேரரணை சமர்ப்பிக்கப்படாமலே இருந்துவந்தது. Read more

முகாமாலை பகுதியில் மீளக்குடியமர்வதற்கு விருப்பம்

Muhamalaiகிளிநொச்சி, முகாமாலை பகுதியில் மீளக்குடியமர்வதற்கு விருப்பம் தெரிவித்து 243 குடும்பங்களைச் சேர்ந்த 1,220பேர்  பதிவு செய்துள்ளதாக பளை பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தின் இதுவரை மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்;படாத பகுதிகளில் ஒன்றான முகமாலையில் தற்போது வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முகமாலையை சேர்ந்த 103 குடும்பங்களை சேர்ந்த 339 பேரும் இத்தாவில் பகுதியை சேர்ந்த 10 குடும்பங்;களைச் சேர்ந்த 39 பேரும் வேம்பொடுகேணி பகுதியை 130 குடும்பங்;;களைச் சேர்ந்த 842 பேருமே இவ்வாறு பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் தற்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தற்காலிகமாக வசித்து வருகின்றனர் என அந்தத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு இறுதிக்குள் முகமாலையில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்ட போதும், வெடிபொருட்கள் முழுமையாக அகற்றப்படாமையால் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.