ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம்-

president visit to indiaஇந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் இடையிலான சந்திப்பு இன்று ராஜ்யபதிபவனில் இடம்பெறவுள்ளது. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் பொதுவாக முக்கிய பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என செய்திகள் கூறுகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை ஒட்டியதாக தமிழக மீனவர்கள் குழுவொன்று இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளது. புதுடெல்கியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை இந்திய மீனவ அமைப்பின் தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் பங்குகொள்வதாக அந்த அமைப்பின் ஆலோசகர் எஸ்.பி அந்தோனிமுத்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்-

kanamat ponor thodarpil  (1) kanamat ponor thodarpil  (2)திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் ஒன்றான கிளிவெட்டி முகாமில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பட்டித்திடல், மணல்சேனை, கட்டைப்பறிச்சான் ஆகிய முகாம்களில் தங்கியுள்ள சம்பூர் மக்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். புதிய அரசாங்கத்தின் நூறுநாள் திட்டத்தின்கீழ் தமது மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்த்தபோதிலும் அது கைகூடவில்லை என கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்கள் கூறினர். சம்பூரில் உள்ள சொந்த காணிகளில் தம்மை குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்-

northern_provincial_council1வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார். கூட்டத்தினை அடுத்து பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. குறித்த வாகனங்களை கரு ஜெயசூரிய அவர்கள் வழங்கி வைத்தார். இதற்கமைய வவுனியா தெற்கு, பூநகரி, காரைநகர், வலி.வடக்கு, பருத்தித்துறை, வெண்கல செட்டிகுளம், மாந்தைகிழக்கு, மாந்தை மேற்கு, நெடுந்தீவு, துணுக்காய் ஆகிய பிரதேச சபைகளுக்கு குறித்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனோர் தொடர்பில் மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டம்-

காணாமல் போனோரை தேடித் தருமாறு கோரி மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது. காந்தி பூங்கா சதுக்கத்தில் காலை 8.30அளவில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. காணாமல் போனோரை கண்டறியும் குழுவுடன் பிராந்திய மகளீர் அமைப்புகளும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் தங்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும் என உண்ணாவிரதத்தில் ஈடடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கோரிக்கை மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

இந்திய படகுகளை தடுத்துநிறுத்தக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்-

india boatsஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய படகுககளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது கடல் எல்லைக்குள் இந்திய படகுகள் அத்துமீறி பிரவேசிப்பதற்கு எதிராக அந்நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜானாதிபதி மைத்திறிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தின் போது உறுதியான தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மார்ச்சில் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்-

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக, இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பையடுத்தே இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.