வட்டகொட தமிழ் மகாவித்தியாலயத்திற்கு புளொட் ஜெர்மன் கிளை உதவி- 

நுவரெலியா வட்டகொட தமிழ் மகா வித்தியாலயத்தின் உயர்தர மாணவர்களுக்கு கடந்த 11.02.2015 அன்று புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. புளொட் அமைப்பின் ஜேர்மன்கிளைத் தோழர்களின் மலையக மக்களுக்கான நிதியுதவியிலிருந்து ஒரு தொகுதி நிதியின் ஊடாக மேற்படி புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. சமூக சேவையாளர் திரு. கெங்காதரன் அவர்கள் வட்டகொட தமிழ் மகா வித்தியாலய அதிபர் திரு பி. பாஸ்கரன் அவர்களிடம் கையளித்துள்ளார்.

திருமலையில் காணாமற் போனார் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வு-

kanamalகாணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு அடுத்த மாதம் திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. மார்ச் 1 ஆம் திகதி குச்சவெளி பிரதேச செயலகத்திலும், 3ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்திலும் அமர்வு இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குச்சவெளி பிரதேச செயலக அமர்வில், கோபாலபுரம், இக்பால் நகர், குச்சவெளி, கும்புறுப்பிட்டி, நிலாவெளி, பெரிய குளம் கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பங்குப்பற்ற முடியும். திருகோணமலை மாவட்ட செயலக அமர்வில் சாம்பல் தீவு, சீனக்குடா, செல்வநாயகபுரம், சிவபுரி, தில்லை நகர், உவர்மலை ஆகிய கிராம பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முறைப்பாடுகளையும், சாட்சியங்களையும் பதிவுசெய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்தவர்களிடம் அன்றைய தினம் வாய்மூல சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவுள்ளதுடன், புதிய முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

ஐ.நாவின் தாமதம் குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது-மன்னிப்புச் சபை-

amnesty internationalaஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை பிற்போடப்பட்டுள்ளமை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு ஏதுவாக அமைந்துவிடக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. எனினும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை பிற்போடுமாறு இலங்கை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக்கொண்ட ஐநா மனித உரிமை ஆணையாளர் ஷெயித் அல் ஹ_சைன் அறிக்கை தாக்கலை 6 மாதங்களுக்கு பிற்போட்டுள்ளார். இந்நிலையில் ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் இம்முடிவு இலங்கையின் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க இடமளிக்க ஏதுவதாக அமைந்துவிடக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசியவலய பணிப்பாளர் ரிச்சாட் பெனாட் கூறியுள்ளார். சாட்சியளித்தவர்களுக்கு நீதி வழங்க மனித உரிமை கவுன்ஸில் விழித்திருக்க வேண்டும் எனவும் சாட்சியாளர்கள் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு முதல்வர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு-

north east chief ministersவட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னும் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ­மட்டும் விரைவில் சந்­திக்­க­வுள்­ளனர். கிழக்கு மாகா­ணத்தின் முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பெற்­றுள்ள ஹாபீஸ் நஸீர் அஹமட் தமிழ்ப் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளு­ட­னான நேற்­றைய சந்­திப்பில் இதனை உறு­திப்­ப­டுத்­தியுள்ளார். அவர் மேலும் கூறு­கையில், தமிழ் முஸ்லிம் மக்­க­ளுக்­கி­டையில் நீண்­ட­கால உறவு காணப்­ப­டு­கின்­றது. அதனை மேலும் வலுப்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும். அத்­துடன் வடக்­கிலும் கிழக்­கிலும் சிறு­பான்மை இனத்தை சேர்ந்­த­வர்­களே முத­ல­மைச்­சர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர். இரு சமூ­கத்­திற்கும் பல்­வேறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. இவை தொடர்பில் ஒற்­று­மைப்­பாட்­டுடன் தீர்வைப் பெற்­றுக்­கொள்­வதே அவ­சி­ய­மா­னது. ஆகவே அவை தொடர்­பா­கவும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் வடக்கு முதல்வரை விரைவில் சந்திக்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் ரம்புக்பொத்தவை புதிய இராணுவத்தளபதியாக நியமிக்க ஏற்பாடு-

புதிய இராணுவத்தளபதியாக மேஜர் ஜெனரல் ரம்புக்பொத்த நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதன் பின்னர் இராணுவத்துக்குள் பிரதான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் மேஜர் ஜெனரல்கள் 15பேரும் பிரிகேடியர்கள் மூவரும் உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று 16ஆம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்கவின் பதவிக்காலம் இம்மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவடைவதை அடிப்படையாக கொண்டே இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது கட்டாயவிடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்ட மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க இராணுவத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சொகுசு ஜனாதிபதி மாளிகைகள், ஹோட்டல்களாக மாற்றப்படும்: பிரதமர்-

கடந்த அரசாங்கத்தின் போது அறுகம்பே மற்றும் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட சொகுசு ஜனாதிபதி மாளிகைகள் இரண்டும் ஹோட்டல்களாக மாற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாளிகைகள் இரண்டும் ஜனாதிபதி செயலக நிதியத்திலிருந்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவற்றை நிர்மாணிப்பதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவற்றை நிர்மாணிப்பதற்காக 90 பில்லியன் ரூபாவுக்கு அதிகமாக தொகை செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலக போக்குவரத்து பிரிவு பணிப்பாளர் கைது-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியில் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய கீர்த்தி திஸாநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திலிருந்து 100 வாகனங்கள் காணாமல் போன குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.