Header image alt text

மூளாய் வைத்தியசாலை நிலைமைகள் ஆராய்வு,  நோயாளர்காவு இருசக்கரவண்டி அன்பளிப்பு-

mulai mulai1யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் மூளாய் பாணாவட்டிப் பகுதியில் மிக அண்மைக்காலத்தில் திறக்கப்;பட்ட வைத்தியசாலைக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த திரு.சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்) மற்றும் திருமதி. ஜெயகுமார் வசந்தி, புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண உருப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தர்த்தன் ஆகியோர் அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவ் நிகழ்வின்போது வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இவர்களை வரவேற்றதோடு வைத்திய சாலையின் தேவைகள் தொடர்பிலும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கருத்துக்களை முன்வைத்தனர். இதன்போது வைத்தியசாலையை அழகுபடுத்தும் பொருட்டு வைத்திய சாலையின் முன் பகுதியில் சிறு பூங்கா அமைக்கும் திட்டம் தொடர்பிலான கருத்துக்களையும் அவர்கள் முன்வைத்தனர் இவ் விடயம் தொடர்பில் குறித்த குழுவினர் இவ் ஆண்டுக்கு முன்னதாக மேற்படி திட்டம் நிறைவுக்கு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டனர் இதனைத் தொடர்ந்து ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்த திரு.சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்) அவர்கள் அவ் நாட்டிலுள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பில் மேற்படி வைத்தியசாலைக்கு நோயாளிகளை காவிச் செல்லும் இருசக்கரவண்டி ஒன்றினையும் அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 35பேர் கைது-

boodமாத்தறை மற்றும் வெலிகமவிலிருந்து வெளிநாட்டுக்கு செல்வதற்கு முயன்ற தமிழர்கள் 35 பேரை இவ்விரு பொலிஸ் பிரிவுகளின் கடற்கரை பொலிஸ் பிரிவு இன்றுகாலை கைதுசெய்துள்ளது. சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மாங்குளம் மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்கள் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மிரிஸ்ஸ துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து உலருணவு பொதிகள் மற்றும் மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

புதுகுடியிருப்பு, கரைதுறைப்பற்று வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை-

புதுகுடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று வாக்காளர்கள் பெப்.21 வரை தற்காலிக அடையாள அட்டைகளை பெற முடியும். இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தலில் வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாதோர், தங்களுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை முல்லைத்தீவு தேர்தல் செயலகத்தில் பெறமுடியும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் கோயிலுக்குச் சென்றவரைக் காணவில்லையென முறைப்பாடு-

sivaயாழில் சிவராத்திரிக்கு ஆலயத்திற்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என, அவரது மனைவி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ். வடமராட்சி கொற்றாவத்தையை சேர்ந்த இராசன் தயாளன் (வயது 41) என்பவரே காணாமல் போயுள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு நேற்று பொலிகண்டியில் உள்ள ஆலயத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை என அவருடைய மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிசார் பொலிகண்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து காணாமல் போனவரின் துவிச்சக்கர வண்டி, அவருடைய பேர்ஸ் என்பவற்றை இன்றுகாலை மீட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர

இலங்கை – இந்திய அணு ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா வரவேற்பு-

maithri modiஇலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஐக்கிய அமெரிக்கா வரவேற்றுள்ளது. சர்வதேச அணுசக்தி முகமை விதிகளுக்கு அமைய பாதுகாப்பாகவும் ஏனைய சர்வதேச வரம்புகளுக்கு உட்பட்டும் இந்த உடன்டிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என அமெரிக்கா இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் ஜென் ப்சக்கி தெரிவித்துள்ளார். இலங்கை – இந்திய அணு ஒப்பந்த விழிப்பு குறித்து தான் விழிப்புடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இந்தியாவுடன் அணுசக்தி உள்ளிட்ட நான்கு அம்ச உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

குமார் குணரத்னத்தின் மனு நீதிமன்றால் நிராகரிப்பு-

முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தன்னை கைதுசெய்து நாடு கடத்துவதை இடைநிறுத்தி உத்தரவிடுமாறு கோரி குமார் குணரத்னம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு முன்னர் விசாரணைக்கு வந்தபோது குமார் குணரத்னத்தை கைது செய்து நாடு கடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் இன்று குறித்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது போதிய ஆதாரங்கள் இல்லாததால் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குமார் குணரத்னம் சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு வந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை நீக்கத்தை அடுத்து குமார் குணரத்னம் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலித தெவரப்பெரும பிணையில் விடுதலை-

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மத்துகம நீதவான் நீதிமன்றில் அவர் இன்று ஆஜர் செய்யப்பட்டபோது மேற்படி பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அகலவத்த நகரில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை மண்டியிட வைத்து தாக்குதல் நடத்தி கலகம் ஏற்படுத்திய சம்பவத்தில் பாலித தெவரப்பெரும கைதுசெய்யப்பட்டு சுமார் ஒன்றரை மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை – இந்திய உறவு தொடர்பில் சீனா மகிழ்ச்சி-

sri &indiaஇலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான புதிய உறவு மகிழ்ச்சி தருவதாக சீனாஅறிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம் தமக்கு மகிழ்ச்சி தருவதாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் {ஹவா சுன்யிங் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை – சீனா இடையே நட்பு, நல்லுறவு காணப்படுவதாகவும் சீனாவை பொறுத்தமட்டில் இலங்கையும் இந்தியாவும் முக்கிய அயல் நாடுகள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள சீனா விரும்புவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பினார்-

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கான நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, இன்று காலை நாடு திரும்பியுள்ளார். மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுக்கான விஜயம் இதுவாகும். இந்திய விஜயத்தின்போது ஞாயிறு மாலை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வளாகத்தில் வைக்கப்பட்டு அவலோக்தேஸ்வர போதிசத்வ சிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரைநீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு; புதுடில்லியில் அமைந்துள்ள ஹைதராபாத் இல்லத்தில் திங்கட்கிழமை பிற்பகல இடம்பெற்றது. அதே நாளில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை புதுடில்லியில் வைத்து சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் கல்லறைக்கும் அஞ்சலி செலுத்தினார். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இலங்கைத் தூதுக்குழுவையும் வரவேற்கும் நிகழ்வு, இந்திய ஜனாதிபதி மாளிகையான ராஸ்ட்ரபதி பவனில் திங்கட்கிழமை நடைபெற்றிருந்தது. அங்கு சென்ற ஜனாதிபதியையும் இலங்கை தூதுக்குழுவையும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் வரவேற்றார்கள். பின்னர் இந்திய ஜனாதிபதிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில், சினேகபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இலங்கை -இந்தியாவுக்கான இரு தரப்பு பேச்சுவார்த்தையை ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் மேற்கொண்டனர். இதன்போது, பொருளாதாரம், சக்தி, மீன்பிடி மற்றும் கலாச்சார உறவுகள் ஆகிய துறையில் நான்கு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டது. ஜனாதிபதியுடன் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதி செயலாளர் பி.பி.அபேகோன் ஆகியோரும் இந்தியா சென்றிருந்தனர்.