Header image alt text

செயலதிபரின் பிறந்ததின நினைவாக பாடல் வெளியீடு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-https://www.youtube.com/watch?v=-3sivNUubbo

plote uma1புளொட் அமைப்பின் மறைந்த செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் 70 ஆவது பிறந்த தின நினைவாக தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம்(Pடுழுவுநு), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(னுPடுகு) ஆகியவற்றின் ஊடகப் பிரிவால் “புறப்பட்ட புரட்சிப் புயலின் தலைவன் உமா மகேஸ்வரன், ஈழ விடுதலைப் போரினை இதயத்தில் சுமந்த விடுதலை சூரியன், எங்கள் உமா மகேஸ்வரன்” எனும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களினால் மறைந்த செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் 70 ஆவது பிறந்த தின நினைவாக வவுனியா பெரியமடு அம்பாள் வித்தியாலயத்துக்கான ஒருதொகை கற்றல் உபகரணங்கள் வித்தியாலய அதிபர் திரு த.அகிலன் அவர்களிடம் இன்றையதினம்(18ஃ02ஃ2015) கையளிக்கப்பட்டது. இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ.கேசவன், பொருளாளர் திரு த.நிகேதன், ஊடக இணைப்பாளர் திரு எஸ்.சஞ்சீவன் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி நிகழ்விற்கான நிதியுதவியினை புளொட்டின் சுவிஸ் கிளை முக்கியத்தர்களுள் ஒருவரான தோழர் செல்வபாலன் அவர்கள் தனது குடும்பத்தினர் சார்பில் வழங்கியுள்ளதுடன், வீடியோ பாடல் வெளியீட்டு உதவி- புளொட் அமைப்பின் அமெரிக்கா, பின்லாந்து கிளையினர்  https://www.youtube.com/watch?v=-3sivNUubbo

IMG_6773 IMG_6783

பொன்னாலை, நாராயணன் மண்டபம் மற்றும் சனசமூக நிலையத்திற்கு விஜயம்-

ponnalaiponnalai2ponnalai1யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேசசபைத் தவிசளா திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட பொன்னாலைச் சந்தியில் அமைந்துள்ள நாராயணண் தாகசாந்தி, அன்னதான மண்டபம் மற்றும் நாராயணன் சனசமூக நிலையம் ஆகியவற்றுக்கு புளொட் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜேர்மனி நாட்டிலிலுருந்து வருகை தந்திருந்த சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்) திருமதி. வசந்தி ஜெயகுமார் ஆகியோர் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவ் நிகழ்வின்போது மேற்படி அமைப்புகளின் தலைவர் திரு ஆணந்த சித்திரசேனன் மற்றும் நிர்வாகத்தினர் இக் குழுவினரை வரவேற்றதுடன் தமது தேவைகள் தொடாடபில் கோரிக்கைகளை முன்வைத்தனர். கடந்த தைப்பொங்கல் தினத்தன்று கட்டப்பட்டட இக் கட்டடத்தின் சனசமூக நிலையத்தினை வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி .நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் கையெழுத்துப் பெறும் போராட்டம்-

eastஅரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் குமார் குணரெட்னத்தின் அரசியல் உரிமையினை வலியுறுத்தியும் மட்டக்களப்பு நகரில் கையெழுத்துப்பெறும் போராட்டம் ஒன்றினை முன்னிலை சோசலிசக்கட்சி முன்னெடுத்துவருகின்றது. இன்று காலை 11.00 மணி முதல் மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது, அரசியல் கைதிகளை விடுதலை செய், குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே, காணாமல் போனவர்களையும் கடத்தப்பட்டவர்களையும் மீட்டுத்தர வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய பதாகையில் கையொப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிகழ்வில் முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.கே.இந்திராநந்த, சமவுரிமை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் கிருபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது குமார் குணரெத்தினம் உட்பட நாடு கடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையினை பறிக்காதே என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

வெளிநாடுகளிலிருந்து அனுப்படும் பொருட்களை வீடுகளில் கையளிக்க ஏற்பாடு-

சாதாரண மக்களின் நலனை கருத்திற்கொண்டு, வெளிநாடுகளில் இருந்து அனுப்பிவைக்கப்படும் பரிசுப்பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று கையளிக்கும் புதிய முறையை சுங்கத்திணைக்களம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் ஜகத் டி வீரவர்த்தன நேற்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். இம்முறையை மார்ச்மாத இறுதியிலிருந்து செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் லக் ஸ்ரீ சோவா என்ற தனியார் நிறுவனத்தின ஊடாக இத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையிலுள்ள 6 நிறுவனங்களில் தற்போது லக் ஸ்ரீ சோவா நிறுவனத்திடம் மாத்திரமே ஸ்கேனிங் இயந்திரம் இருப்பதனால் இந்நிறுவனத்தின் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். பொதிகளை உடைக்காது ஸ்கேனிங் இயந்திரத்தின் உதவியுடன் சோதனைக்குட்படுத்தி அவற்றை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இச்சேவைக்காக உரிமையாளர்கள் எவ்வித் கட்டணங்களையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. பொதிகளை அனுப்புபவர் கண்டணத்தை செலுத்துவதால் பெற்றுக்கொள்பவர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நான்கு இலங்கையர்களை திருப்பி அனுப்பிய அவுஸ்திரேலியா-

படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற நான்கு இலங்கை பிரஜைகள் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய கோகஸ் தீவு கடற்பரப்பில் வைத்து குறித்த இலங்கையர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 9ம்திகதி தடுத்து நிறுத்தப்பட்ட இவர்கள் மறுநாள் இலங்கைக்கு திருப்பு அனுப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டுடோன் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தல் காரர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக குடிவரவு அமைச்சர் கூறியுள்ளார்.

குமார் குணரத்னத்திற்கு குடிவரவு திணைக்களம் அழைப்பு-

முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை நாடுகடத்தும் உத்தரவு ஆவணத்தை அவரிடமே கையளிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. குமார் குணரத்னம் தன்னை நாடு கடத்த வேண்டாம் என கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால் இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருக்க குமார் குணரத்னத்திற்கு அனுமதி இல்லை. இந்நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருமாறு குமார் குணரத்னத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை நிராகரிப்பாராயின் குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு பொறிமுறை ஆபத்தானது – குணதாஸ அமரசேகர-

உள்நாட்டு பொறிமுறை நாட்டுக்கு மேலும் ஆபத்தானது என்று, தேசிய அமைப்புக்களின் ஒன்றிய இணைப்பாளர் குணதாஸ அமரசேகர கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், உள்நாட்டு விசாரணைகள் குறித்து கேள்விகளை எழுப்ப முடியாது என்று கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் எதிர்ப்புகளை வெளிப்படுத்த முடியும். உள்நாட்டு விசாரணைகளுக்கு அவ்வாறு செய்யமுடியாது. அத்துடன் இது உள்நாட்டு விசாரணை என கூறப்படுகிறபோதும், அவர்களுக்கு தேவையான வகையிலேயே இந்த விசாரணை இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆஸியில் இலங்கை அகதிகள் துன்புறுத்தல்-

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமான பப்புவா நியுகினியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டு பணியாளராக பணியாற்றிய ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளதாக பி.பி.சீ ஊடகம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்கின்றவர்கள் இந்த முகாமில் தடுத்து வைக்கப்படுகின்றனர். இந்த முகாமில் இலங்கை, ஈரான், மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தடுத்து வைக்கபட்டுள்ள நிலையில் அவர்களை அங்குள்ள அதிகாரிகளால் நாளாந்தம் நிந்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார். இனரீதியாக தூசித்தல், துன்புறுத்தப்படுதல், முறையாக பேணப்படாமை போன்ற பல்வேறு கொடுமைகளுக்கு அகதிகளை ஆளாகின்றனர். அத்துடன் சரியான சுகாதார வசதிகள் இல்லாமையால், பல நோய்களுக்கும் அவர்கள் ஆளாக்கப்படுகின்றனர் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரன் பத்மநாதன் குறித்த மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு-

புலிகள் இயக்க முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி. என்கிற குமரன் பத்மநாதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்செய்த ரிட்மனு இன்று பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் விஜித் மலல்கொட மற்றும் எச்.சீ.ஜே. மடவல ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக கால அவகாசம் தேவைப்படுவதாக சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் சுஹத கம்லத் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். பொலிஸ் மாஅதிபர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரை சந்தித்து தாம் இந்த விடயம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், குமரன் பத்மநாதன் என்பவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் சுதந்திரமாக நடமாட இடமளிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பாக நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை இராணுவத்திற்கு எதிராக யுத்தம் புரிவதற்காக புலிகள் இயக்கத்திற்கு தமது கப்பல்கள்மூலம் குமரன் பத்மநாதன் ஆயுதங்களையும், குண்டுகளையும் விநியோகித்துள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார். கே.பீ. மலேஷியாவில் கைதுசெய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக அறியக்கிடைக்கின்ற போதிலும், அவ்வாறான குற்றவாளி ஒருவர் தொடர்பில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளதாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார். இருதரப்பு வாதங்களையும் கவனத்திற்கொண்ட பின் இந்த மனுமீதான விசாரணை பெப்ரவரி 26ஆம் திகதிக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டது. கே.பி வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு எதிர்வரும் 26ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.