பொன்னாலை, நாராயணன் மண்டபம் மற்றும் சனசமூக நிலையத்திற்கு விஜயம்-

ponnalaiponnalai2ponnalai1யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேசசபைத் தவிசளா திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட பொன்னாலைச் சந்தியில் அமைந்துள்ள நாராயணண் தாகசாந்தி, அன்னதான மண்டபம் மற்றும் நாராயணன் சனசமூக நிலையம் ஆகியவற்றுக்கு புளொட் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜேர்மனி நாட்டிலிலுருந்து வருகை தந்திருந்த சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்) திருமதி. வசந்தி ஜெயகுமார் ஆகியோர் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவ் நிகழ்வின்போது மேற்படி அமைப்புகளின் தலைவர் திரு ஆணந்த சித்திரசேனன் மற்றும் நிர்வாகத்தினர் இக் குழுவினரை வரவேற்றதுடன் தமது தேவைகள் தொடாடபில் கோரிக்கைகளை முன்வைத்தனர். கடந்த தைப்பொங்கல் தினத்தன்று கட்டப்பட்டட இக் கட்டடத்தின் சனசமூக நிலையத்தினை வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி .நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.