இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் யாழ் விஜயம்-

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை 11.00 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன், யாழ் நிலமைகளை கேட்டறிந்து கொண்டதுடன், கனடா அரசாங்கத்தினால் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை ஆராய்ந்ததுடன், மேலதிக உதவிகளை புரிவதற்கு கனடா அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் தெரிவிப்பதாகவும் கனடா உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார். அதன் பின்னர், யாழ். மாவட்ட வர்த்தக தொழிற்துறை மன்றத்திற்கும் அவர் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்வி இராஜாங்க அமைச்சரின் மூளாய் விஜயம்-

jaffna jaffna1யாழ். மூளாய் தென்இந்திய திருச்சபை தேவாலயத்திற்கு அதி தேவாலயத்தின் குருவான வண.செபஸ்டியன் அன்டனி அவர்களது அழைப்பின் பெயரில் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ. இராதாகிருஸ்னன் அவர்களும் அவர்களது பரியாரும் அண்மையில் வருகை தந்திருந்தனர் இவ் நிகழ்வின் போது உத்தியேகபூர்வ அழைப்பின் பெயரில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி. ஐங்கரன் அவர்களும் இந்திய துணைத் தூதுவர் அவர்ளும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இவ் நிகழ்வின் ஆரம்பத்தில் தென் இந்திய திருச்சபை தேவாயத்தில் சிறப்பு வழிபாடுகள் தென் இந்திய திருச்சபையின் வண. செபஸ்டியன் அன்டனி அவர்களால் முன்னெடுக்கப்பட்டு அமைச்சர் மறறும் தவிசாளருக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது தொடர்ந்து ஆலய குருவின் இல்லத்தில் கலந்துரையாடல் இடம் பெற்றது.