தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் வவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்திற்கு வர்ணப்பூச்சு கையளிப்பு-

IMG_7238IMG_7233வவவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகராஜா வித்தியாலய கட்டடங்களின் புனரமைப்புக்காக பாடசாலை அதிபர் திரு. எஸ்.வரதராஜா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வர்ணப்பூச்சு இன்று (06.03.2015) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து பாடசாலையின் பௌதீக வளர்ச்சி தொடர்பாகவும் மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இவ் நிகழ்வில் புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதவும், தமிழ் தேசிய இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்), பாடசாலை அதிபர் திரு. எஸ்.வரதராஜா, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஊடக இணைப்பாளர் திரு. ம.சஞ்சீவன், செயலாளர் திரு. ஸ்ரீ.கேசவன், பொருளாளர் திரு. த.நிகேதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மகளிர் எழுச்சி வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள்-

P1020002வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்ப்பட்டுவரும் சர்வதேச மகளிர் நாளினை முன்னிட்ட மகளிர் எழுச்சி வாரத்தின் எழுச்சி நாள் 5 – 05.03.2015 அன்று வலி மேற்கு பிரதேச சபை கலாச்சர மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது இவ் நிகழ்வின்போது வலிமேற்கு தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், பிரதேச சபை உறுப்பினர் ந.பி.ராஜ்குமார், வலி மேற்கு பிரதச சபை உறுப்பினர் காங்கேயநாதன், சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசுமான செல்வி.சாருஜா சிவநேசன் அவ்களும் கலந்துசிறப்பித்தனர். நேற்றைய தினத்தின் கருப் பொருளாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச் சட்ட ஆலோசனை எனும் தலைப்பில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் தவிசாளர் உரையாற்றும்போது, இன்றைய சூழ்நிலையில் பல விடயங்களாலும் பாதிப்புற்ற நிலையில் தமது பிரச்சனைகளை உரிய முறையில் தீர்வு காணமுடியாத நிலையில் பல பெண்கள் காணப்படுகின்றனர். இவ் நிலையில் அவர்கள் பல தாக்கங்களுக்கும் உட்படும் நிலை காணப்படுகின்றது. இவ் நிலை தொடர்பில் உரிய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இன்றைய இவ் எழுச்சி நாள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவ் விடயம் தெடார்பில் வெகு விரைவில் எமது பிரதேசத்தில் பெண்களுக்கான இலவச சட்ட மையம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கும் வெகுவிரைவில் நடைமுறைச் சட்டங்கள் தொடாடபில் விளக்கம் அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்.

P1020022 P1020024