seddikulzm seddikulzm4சூடுவெந்தபுலவு கிராமத்தில் இந்தியன் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு தொடர்பான கூட்டத்தில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளரை அவதூறாக பேசியமை மற்றும் அரச ஊழியர்களை தாக்க முற்பட்டமை போன்றவற்றினை கண்டித்து , வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக ஊழியர்கள்  அடையாள பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“வன்முறையை கையில் எடுக்காதீர்” , “மக்கள் சேவைக்கு மதிப்பளியுங்கள்” , “அரச ஊழியர் மீது வன்முறை வேண்டாம்” , “நியாயமற்ற கோரிக்கையை நிறைவேற்ற நிர்ப்பந்திக்காதீர்” , “அரச ஊழியர் மீது அவதூறு தெரிவிக்காதீர்” , “அரச ஊழியர் மீது அழுத்தங்களை பிரயோகிக்காதீர்” போன்ற பல பதாதைகளை தாங்கிய வண்ணம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.