Header image alt text

சங்கானை மேற்கு பிரதேச நூலக திறப்பு விழா

Vali west01வலி மேற்கு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட சங்கானைப் பிரதேச நூலகம் கடந்த 09.02.2015 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இவ்  நிகழ்வு வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி. ஐங்கரன் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தழிழரசுக் கட்சியின் தலைவருமாகிய கௌரவ.மாவை.சோ.சேனாதிராஜா அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ.அப்பாத்துரை.விநாயகமூர்த்தி, கௌரவ.ஈஸ்வரபாதம்.சரவணபவன்,கௌரவ.சுரேஸ்.பிரேமச்சந்தின கௌரவ.சிவஞானம்.சிறீதரன், ஆகியோர் சிறப்பு விருந்தினராகளாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபையின் உறுப்பினருமான கௌரவ.தர்மலிங்கம்.சித்தாhத்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாண சபை உறுப்பினரர்களான கௌரவ.விந்தன்.கணகரட்ணம், கௌரவ.இமானுவேல்.ஆணோட் பேராசிரியர். சி.க.சிற்றம்பலம் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். Read more

வலி மேற்கில் மக்கள் மயப்படுத்தப்பட்டதான 100 நாள் விசேட அபிவிருத்தித்திட்டம்

valiwest01 valiwest02 valiwest03 valiwest04வலி மேற்கில் மக்கள் மயப்படுத்தப்பட்டதான 100 நாள் விசேட அபிவிருத்தித் திட்டத்திற்கு இணைந்ததாக கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்சித்திட்டம் இன்று ஆரம்பம் வலி மேற்கில் மக்கள் மயப்படுத்தப்பட்டதான 100 நாள் விசேட அபிவிருத்தி திட்டத்திற்கு இணைந்ததாக கிராமங்களை அபிவிருத்திசெய்யும் நிகழ்சித்திட்டம் இன்றய தினம் இன்று(16.03.2015) ஆரம்பம் குறித்த செயல் திட்டத்தின் போது இன்றய தினம் ஆறு கிராம சேவகர் பிரிவு ரீதியான மக்கள் திட்டங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டது. இவ் திடடத்தின் போது மக்கள் சந்திப்பு இடம் பெற்று அதன் வாயிலாக அபிவிருத்தித்த் திட்டங்கள் இனங்காணப்பட்து.. இவ் நிகழ்வின் போது வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ. திருமதி.நாகரஞ்சினி. ஐங்கரன், பிரதேச செயலர் திரு.ஆ.சோதிநாதன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.சிவகுமார், அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி.பொன்மலர் தொழில் நுட்ப உத்தியோகஸ்தர் த.புலேந்திரன் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கிராமசேவகர்கள் மற்றும ஏராளமான பொது மக்கள் கலந்து சிறப்பித்து தங்களது திட்டங்களை முன்வைத்தனர்

மாற்றம் காணும் சங்கானை மீன் சந்தை

chankanai chankanai1 chankanai2 chankanai3சங்கானைப் பகுதியில் மிக சனத்ததொகை நெருக்கடியான பகுதியாக அமைவது சங்கானை பிரதேச செயலகத்தினை சூழ உள்ள பகுதியாகும். 25 கிராம சேவகர் பிரிவுகள் உள்ள இவ் செயலகம ஆனது சுமார் 200 அரச பணியாளர்களை கொண்டு தனது சேவையை வழங்கி வருகின்றது. இவ் நிலையில் அலுவலக வேனைகளில் இப் பகுதி மிகுந்த நெருக்கடியான பகுதியாகவே அமைவு பெற்றிருப்பது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இதே வேளை குறித்த பிரதேச செயலகத்தின் முன பகுதியில் மேற்படி தற்போதய மீன் சந்தை அமைந்திருப்பது மிக நெருக்கடியினை ஏற்படுத்தும் அதே வேளை சுகாதார சீர் கேடுகளையும் கொண்டதாக அமைந்திருந்தது. இதே வேளை இவ் சங்கானைப் பகுதியானது பொதுமக்களுக்கான சேவை மையமாக அண்மைக்காலத்தில் மிக வேகமான வளர்ச்சியினை கொண்டுள்ளது. தற்போது உள்ள இட நெருக்கடியினை கருத்தில் கொண்டு புதிய மீன் சந்தை சங்கானை பிரதேச செயலகத்தின் பின் பகுதியில் மிக வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றது. இவ் சந்தையானது 36 மில்லியன் ரூபா செலவில் வலி மேற்கு பிரதேச சபையால் அமைக்கப்படுவது குறிப்பிடக் கூடிய ஒர் விடயம் ஆகும்

 

IMG_7699 IMG_7715 IMG_7753 IMG_7826வவுனியா தெற்கிலுப்பைக்குளம் கோகுலம் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா இன்று (14.03.2015) சனிக்கிழமை காலை 9மணியளவில் முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. குணராஜா சிவகுமாரி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் முக்கியஸ்தரும்இ வவுனியா  நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும்இ தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் பிற முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள்இ பெற்றோர்கள்இ மாணவர்கள்இ கிராம முக்கியஸ்தர்கள்இ நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர். மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப்  போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சிஇ முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள்இ வினோத உடை நிகழ்ச்சிஇ பழைய மாணவர் நிகழ்ச்சிஇ பெற்றோர் நிகழ்ச்சிஇ விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.