சங்கானை மேற்கு பிரதேச நூலக திறப்பு விழா
வலி மேற்கு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட சங்கானைப் பிரதேச நூலகம் கடந்த 09.02.2015 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வு வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி. ஐங்கரன் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தழிழரசுக் கட்சியின் தலைவருமாகிய கௌரவ.மாவை.சோ.சேனாதிராஜா அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ.அப்பாத்துரை.விநாயகமூர்த்தி, கௌரவ.ஈஸ்வரபாதம்.சரவணபவன்,கௌரவ.சுரேஸ்.பிரேமச்சந்தின கௌரவ.சிவஞானம்.சிறீதரன், ஆகியோர் சிறப்பு விருந்தினராகளாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபையின் உறுப்பினருமான கௌரவ.தர்மலிங்கம்.சித்தாhத்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாண சபை உறுப்பினரர்களான கௌரவ.விந்தன்.கணகரட்ணம், கௌரவ.இமானுவேல்.ஆணோட் பேராசிரியர். சி.க.சிற்றம்பலம் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். Read more