வலி மேற்கில் மக்கள் மயப்படுத்தப்பட்டதான 100 நாள் விசேட அபிவிருத்தித்திட்டம்
வலி மேற்கில் மக்கள் மயப்படுத்தப்பட்டதான 100 நாள் விசேட அபிவிருத்தித் திட்டத்திற்கு இணைந்ததாக கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்சித்திட்டம் இன்று ஆரம்பம் வலி மேற்கில் மக்கள் மயப்படுத்தப்பட்டதான 100 நாள் விசேட அபிவிருத்தி திட்டத்திற்கு இணைந்ததாக கிராமங்களை அபிவிருத்திசெய்யும் நிகழ்சித்திட்டம் இன்றய தினம் இன்று(16.03.2015) ஆரம்பம் குறித்த செயல் திட்டத்தின் போது இன்றய தினம் ஆறு கிராம சேவகர் பிரிவு ரீதியான மக்கள் திட்டங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டது. இவ் திடடத்தின் போது மக்கள் சந்திப்பு இடம் பெற்று அதன் வாயிலாக அபிவிருத்தித்த் திட்டங்கள் இனங்காணப்பட்து.. இவ் நிகழ்வின் போது வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ. திருமதி.நாகரஞ்சினி. ஐங்கரன், பிரதேச செயலர் திரு.ஆ.சோதிநாதன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.சிவகுமார், அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி.பொன்மலர் தொழில் நுட்ப உத்தியோகஸ்தர் த.புலேந்திரன் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கிராமசேவகர்கள் மற்றும ஏராளமான பொது மக்கள் கலந்து சிறப்பித்து தங்களது திட்டங்களை முன்வைத்தனர்
மாற்றம் காணும் சங்கானை மீன் சந்தை
சங்கானைப் பகுதியில் மிக சனத்ததொகை நெருக்கடியான பகுதியாக அமைவது சங்கானை பிரதேச செயலகத்தினை சூழ உள்ள பகுதியாகும். 25 கிராம சேவகர் பிரிவுகள் உள்ள இவ் செயலகம ஆனது சுமார் 200 அரச பணியாளர்களை கொண்டு தனது சேவையை வழங்கி வருகின்றது. இவ் நிலையில் அலுவலக வேனைகளில் இப் பகுதி மிகுந்த நெருக்கடியான பகுதியாகவே அமைவு பெற்றிருப்பது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இதே வேளை குறித்த பிரதேச செயலகத்தின் முன பகுதியில் மேற்படி தற்போதய மீன் சந்தை அமைந்திருப்பது மிக நெருக்கடியினை ஏற்படுத்தும் அதே வேளை சுகாதார சீர் கேடுகளையும் கொண்டதாக அமைந்திருந்தது. இதே வேளை இவ் சங்கானைப் பகுதியானது பொதுமக்களுக்கான சேவை மையமாக அண்மைக்காலத்தில் மிக வேகமான வளர்ச்சியினை கொண்டுள்ளது. தற்போது உள்ள இட நெருக்கடியினை கருத்தில் கொண்டு புதிய மீன் சந்தை சங்கானை பிரதேச செயலகத்தின் பின் பகுதியில் மிக வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றது. இவ் சந்தையானது 36 மில்லியன் ரூபா செலவில் வலி மேற்கு பிரதேச சபையால் அமைக்கப்படுவது குறிப்பிடக் கூடிய ஒர் விடயம் ஆகும்