வசாவிளான் மற்றும் வளலாய் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு விஜயம்-

fffffffffயாழ். வசாவிளான் கிழக்கு ஒட்டகப்புலம் மற்றும் வளலாய் உள்ளிட்ட பகுதிகளின் காணிகளை மக்களின் மீள்குடியேற்றத்திற்கு விடுவதென்று அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதிகளுக்குச் சென்ற மக்களை இராணுவத்தினர் அங்கு செல்வதற்கு விடவிலலை.. வசாவிளான், வளலாய் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை குடியேற்றுவதற்கான காணிகள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்தே அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நேற்றையதினம் அங்கு சென்றிருந்தனர். எனினும் மீள்குடியேற்றக் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் வசாவிளான் மற்றும் வளாலை பகுதிகளுக்கு நேற்று விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள் நிலைமைகளைப் பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடியதோடு இப்பிரச்சினையை உடன் மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.