Header image alt text

புதிய அரசின் ஆட்சிக்காலத்தில் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் -ஜனாதிபதி

M,S,R in jaffna1M,S,R in jaffna2யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருப்பதை அறிந்திருப்பதாகவும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தீர்வு காணப்படும் என்றும்.
தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த மக்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான காணிப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கின்றார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் வளலாய் பகுதியில் உள்ள 424 ஏக்கர் பரப்புள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களான பொதுமக்களுககுக் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கினார். Read more

வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் காணாமல்போனோரின் உறவினர்கள் போராட்டம்

mannar missing protestest2இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பில் நடத்தப்பட்டு வருகின்ற உள்ளக விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச தரத்திலான விசாரணையை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடந்துள்ளன.
வடக்கே வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுமாக 8 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மாவட்ட அரச செயலகங்களுக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கான நலன்புரி அமைப்புக்களும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து இதற்கான அழைப்பை விடுத்திருந்தன.
காணாமல்போயுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதில் சர்வதேசத்தின் அர்ப்பணிப்புடனான ஈடுபாடு அவசியம் என்று வலியுறுத்தும் மகஜர் ஒன்றும் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக இந்த 8 மாவட்டங்களிலும் கையளிக்கப்பட்டிருக்கின்றன.

Read more

சிங்கப்பூரின் தேசத்தந்தை லி குவான் யூ காலமானார்-

lee kuangசிங்கப்பூரின் தேசத்தந்தை என்று போற்றப்படும் லி குவான் யூ காலமானதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இறக்கும்போது அவருக்கு வயது 91. ஒரு காலத்தில் சின்னஞ்சிறு கடற்கரை நகரமாக பார்க்கப்பட்ட சிங்கப்பூரை, உலகின் முக்கிய செல்வந்த மையமாக மாற்றிக்காட்டியவர் லீ என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ குவான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ 31 ஆண்டுகள் பதவியில் இருந்தார். கடந்த பல வாரங்களாக நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் இன்று அதிகாலை, அமைதியான முறையில் அவரது உயிர் பிரிந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இறுதிச் சடங்குகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவராக தினேஷை நியமிக்குமாறு கோரிக்கை-

dineshஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளமையால் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா, எதிர்க்கட்சி தலைவராக தொடர்ந்து இருப்பதில் எவ்விதமான தார்மீகமும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தெரிவித்துள்ளன. ஆகையால், எதிர்க்கட்சி தலைவராக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தனவை நியமிக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பின் பங்காளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, பிவிதுரு ஹெல உறுமயவில் செயலாளர் உதயன் கம்பன்பில ஆகியோர் இணைந்து கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு வலியுறுத்தும் கூட்டம் இரத்தினபுரியில் எதிர்வரும் 26ஆம் நடைபெறும் என்றும் பங்காளிகள் கட்சிகள் தெரிவித்துள்ளன.

சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில்; ஆர்ப்பாட்டம்-

140129160658_missing_people_commission_304x171_bbc_nocreditகாணாமல் போனவர்கள் தொடர்பாக உள்ளக விசாரணைகளை முறையாக முன்னெடுக்கவில்லை. எனவே இவ்விடயம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் இன்றுகாலை முதல் மட்டக்களப்பு நகரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு மணிக்கூட்டுக்கோபுரத்தின் முன்பாக அதிகமான பெண்கள் காணாமல் போனோரின் உறவினர்களின் புபை;படங்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். உண்ணாவிரதம் இடம்பெற்ற பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் ஐ.நா சபை செயலாளர் நாயகத்திற்கு அனுப்புவதற்கான மகஜரை மாவட்ட லயன்ஸ் கழக தலைவர் கே.செல்வேந்திரன் கையளித்தார். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் காந்தி சேவா சங்க செயலாளர் எஸ்.கதிர் பாரதிதாசன் உட்பட பிரமுகர்கள் பலரும் சமுகமளித்திருந்தனர். உள்ளக விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கையில்லை. சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் அனுப்புவதாக செல்வேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தனவுக்கு பிணை மறுப்பு-

sarana gunawardenaமுன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரண குணவர்தனவை எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது. அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனுவை நிராகரித்த அத்தனகல நீதவான் காவிந்தியா நாணயக்கார, சரண குணவர்தனவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரும்பு மோசடி சம்பவங்கள் தொடர்பில் அவருக்கு எதிராக செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிலாபத்தைச் சேர்ந்த வர்த்தகரான மொஹமட் ரஷ்மி என்பவரால் மூன்று வருடங்களுக்கு முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் முன்னாள் அமைச்சருடன் பேசப்பட்ட வர்த்தகம் தொடர்பிலான ஒலிநாடாவையும் அந்த வர்த்தகர், குற்றப்புலனாய்வு பிரிவில் ஒப்படைத்திருந்தார். அதனடிப்படையிலேயே அவர், கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்-

ajith pereraரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஒருவர் யுக்ரைய்ன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களைப் பெற்றுக்கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. யுக்ரைய்ன் அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு அமைய அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரரா குறிப்பிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கியமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் குறித்து யுக்ரெய்ன் அரசாங்கம் வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகள் நிறைவுபெற்றதும் முன்னாள் தூதுவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை வருகை-

european unionஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்களை நடாத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளது. இக்குழுவினர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2010ஆம் ஆண்டு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன்படி, இலங்கையில் தயாரிக்கப்படுகின்ற 300 வகையான ஆடை உற்பத்திகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராமேஸ்வர மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுப்பு-

fishingஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வர மீனவர்கள், இன்றுமுதல் காலவரையரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நாளைய தினம் இலங்கை-இந்திய மீனவ சங்கங்களுக்கிடையில் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் இந்த மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இது தொடர்பில் இன்றுகாலை இராமேசுவரத்தில் மீனவர்கள் சங்கங்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் மீனவர்கள் சங்க தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இருநாட்டு மீனவர்களுக்கிடையே சுமூகமாக பேச்சுவார்த்தை நடைபெற உடனே இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 54 பேரை விடுதலை செய்ய வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்படும் வரை இராமேசுவரத்தில் மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இராமேசுரவம் மீனவர்கள் இன்றுமுதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் சுமார் 800க்கும் அதிகமான விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வலிமேற்கு பிரதேச சபையில் உலக நீர் தினம் அனுஷ்டிப்பு-

vali westயாழ். வலிமேற்கு பிரதேச சபையின் கலாச்சரா மண்டபத்தில் உலக நீர் தினம் நேற்று (22.03.2015) ஞாயிற்றுக்கிழமை வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞசினி ஐங்கரன் அவர்களது தலைமையில் பெரும் எழுச்சியுடன் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபையின் விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை அமைச்சின் அமைச்சர் கௌரவ. பொ.ஐங்கரநேசன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் திரு.ச.ரவி மற்றும் யாழ்பல்கலைக் கழக இரசாயனவியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி .க.வேலாயுதமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர், கௌரவ விருந்தினர்களாக வேள்ட் விசன் நிறுவன யாழ்மாவட்ட செயற்பாட்டு முகாமையாளர் திரு.ஜெயாட் அன்டனி மற்றும் வேள்ட் விசன் நிறுவன யாழ்மாவட்ட திட்ட முகாமையாளர் திரு.பிரான்சிஸ் அலெக்ஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மதியம் 2.00 மணியளவில் நிகழ்வுகள் வலக்கம்பறை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று Read more