வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தோம் – விஜயகாலா மகேஸ்வரன்

jaffna_unp_10பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வருகை தராமல் இருப்பது கவலையளிப்பதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், அவர் கலந்துகொள்ளவில்லை. அவருடன் வடமாகாண அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் இணைத்ததாக நடைபெறும் இந்நிகழ்வுக்கு அவர்கள் வருகை தராதது கவலையளிக்கின்றது. அவர்கள் வருகை தராமையானது தெற்கு அரசு இங்கு வடமாகாணத்தில் தனது செயற்பாடுகளை செய்வதற்கு இடமளிப்பதாக அமையும். என்ன கோபதாபங்கள் இருந்தாலும் அதை பொது நிகழ்வுகளில் முன்னிறுத்தாது கலந்துகொள்ள வேண்டுமென கர்ப்பிணிப் பெண்களுக்கு போஷாக்கு பொதிகளை வழங்கும் நிகழ்வு, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர்; கலந்துகொண்டனர்.

வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை – பா.உ.சிறிதரன்

jaffna_unp_9பிரதமர் விக்கிரமசிங்க யாழில் கலந்துகொள்ளும் எந்தவொரு நிகழ்வுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் நானும் அந்நிகழ்வுகளுக்கு செல்லவில்லை. யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலந்துகொள்ளும் பல்வேறு நிகழ்வுகளில் என்னையும் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்டச் செயலகம் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கிறேன் என்று  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும்  அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. jaffna_unp_5வடமாகாணத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்ட நிகழ்வுகளில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கலந்து கொள்ளாத நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிரதமருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நிழல் யுத்தம் ஒன்று நடைபெற்று வருகின்றது. கடந்த வாரம் யாழ்.வளலாய் நிகழ்வுகளிலும் இப்போக்கு காணப்பட்டது.
கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வட மாகாண முதலமைச்சரை சந்திக்கப்போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களையே சந்திப்பேன் என தெரிவித்திருந்ததாக செய்திகள் கூறுகின்றன.
முதலமைச்சருக்கு அழைப்பிதழ்; அனுப்பி வைக்கப்படவில்லை. இந்நிலையில் jaffna_unp_2வடமாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பிரதமரின் யாழ். நிகழ்வுகளை நாங்கள் புறக்கணிப்போம் என தெரிவித்திருந்தனர்.
எனினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமரின் கிளிநொச்சி விஜயத்தை புறக் கணிக்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.  சி.சிறீதரன் அறிக்கையின் சாராம்சம் வருமாறு
அந்த அறிக்கையில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையில் வடக்கு முதல்வர், நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு அழைப்பவிடுக்காது, ஏனைய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது தமிழ் மக்களின் தேசிய ஒற்றுமையை சிதறடிப்பதன் வடிவமே.
இலங்கையின் பிரதமராக அவருடைய உத்தியோகபூர்வ பணிமனையின் ஊடாக வடக்கு மாகாணத்தின் சகல மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்து, அந்த அழைப்பின் பிரகாரம், அவர் பங்குபற்றும் நிகழ்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றுவதே பொருத்தமானது.
அதை விடுத்து மாவட்ட அரச செயலகங்களில் உள்ள அதிகாரிகளினூடாக அழைப்பு விடுத்து அரச உயர் பண்பாட்டு நாகரீகங்களை மீறி, ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவது கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராகிய எனக்கு பொருத்தமற்றது.
கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உக்கிரவடிமாக ரணில் விக்கிமசிங்க திகழ்கின்றார். தமிழ் தேசியத்தின் மீதான தீராத தாகம் கொண்டு பயணிக்கும் கொள்கைவாதிகளையும், மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் பிரித்து ஒற்றுமையை சிதைத்து, தமிழர்களின் சுதந்திர தாகம் கொண்ட ஆன்மாவை அடக்கலாமென அவர் செயற்படுவதாகவே உணரமுடிகின்றது.
வடக்கு, கிழக்கிலும், மலையகத்திலும் ஏன் உலகமெல்லாம் வாழும் புலம்பெயர் மக்களினதும் ஏகோபித்த வரவேற்பையும் மதிப்பையும் பெற்ற கடந்த வடமாகாண சபை தேர்தலில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் விருப்புவாக்குகளையும் பெற்ற வடக்கு மாகாண முதலமைச்சரை புறக்கணித்து வடக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிகழ்வுகளை நடத்துவதானது ஜனநாயகத்திற்கும், நல்லாட்சிக்கும், இன சகிப்புத்தன்மைக்கும், நல்லிணக்கத்துக்கும், மக்கள் ஆணைக்கும் வைக்கப்பட்ட வேட்டாகும்.
கடந்த கால வரலாற்று பாடங்களை தமிழ்மக்களாகிய நாம் உற்று நோக்கும் போது இன்றைக்கும் தன் பௌத்த பேரினவாத சிந்தனையில் இருந்து வெளிவராத தென்னிலங்கைத் தலைமைகளின் ஒரு வடிவமாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளதை நாம் உணர்கின்றோம் என அவரது அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது