Header image alt text

சூரிச்சில் நடைபெறவுள்ள மே தின ஊர்வலத்தில் ‘புளொட்’ பங்கேற்பு-

siss may dayசுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் எதிர்வரும் மே 01ஆம் திகதி (01.05.2015) வெள்ளிக்கிழமை அன்று கலந்து கொண்டு நடத்தும் தொழிலாளர் தின (மே தினம்) நிகழ்வினில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரும் பங்கேற்று உரிமைக்குரல் கொடுக்கவுள்ளனர்.

இந்த நிகழ்வின்போது தமிழ் இனத்தின்; பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமற் போனோர் விடயம் தொடர்பில் உரிய தீர்வு காணப்படல் வேண்டும். இடம்பெயர்ந்துள்ள மற்றும் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே போன்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை தாங்கிய வண்ணம் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மற்றைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என பலரும் மேதின நிகழ்வினில் பங்கேற்கவுள்ளனர்.

காலம்: 01.05.2015 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி

இடம்.. சூரிச் பிரதான புகையிரத நிலையத்துக்கு அண்மையில் உள்ள (சீல் போஸ்டுக்கு) LAGER Strasse எனும் இடத்தில் ஊர்வலம் ஆரம்பித்து BüRKLI Platz  இல் முடிவடையும்.

இந்நிகழ்வில் உரிமைகளுக்காக இணைந்து குரல்தர அனைவரையும் அணிதிரளுமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினராகிய நாம் அன்போடு அழைக்கின்றோம். நன்றி.

தொடர்புகளுக்கு…076.5838410 – 079.824153 – 079.6249004 – 077.9485214

அனைத்துலக தொழிலாளர் தினம் -2015

mrs ainkaran (7)இன்றைய இந்நாள் வரலாற்று ரீதியன பெருமை மிக்க நாள். தொழிலாளர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட புனித நாள். இவ் நாள் ஒவ்வோர் தொழிலாளர்களின் உன்னதமான தியாகத்தின் திருநாள் இந் நன்நாளில் இன்றும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு உள்ள தொழிலாளர் உரிமைகள் வென்றெடுக்க அனைவரும் பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டும். இன்றுவரை அழிக்கப்பட்டு இடுகாடு ஆக்கப்பட்ட எமது தாயகத்தின் பல பாகங்களிலும் தாக்கப்பட்டு தொழில் இழக்கப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் தமது தொழில் உரிமைகளைப் பெறவும் திட்டமிட்டு கையகப்படுத்தப்பட்ட எமது புனிதமான மருத நிலங்கள் மீண்டும் மலர்ச்சி பெறவும் பரம்பரையாகவும் தலைமுறையாகவும் எமது என்று மார் தட்டிய நெய்தல் எமக்காகவும் கெடிய யுத்தத்தின் வாயிலாக அழிக்கப்பட்ட முல்லைகளும் அவற்றின் பசுமைகளும் மீண்டும் செழிக்கவும் எமது நிலம் எமது உரிமை என்ற உயரிய உன்னதமான கோசங்கள் வான் வெளிகளுக்கு அப்பால் எம் காவிய நாயகர்களின் காதுகளில் ஒலித்திட ஒன்றுபட அனைவரும் எழுந்து வாருங்கள்.

என்றும் தமிழ் அன்னையின் புதல்வியாய்

திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை.

யாழ் மாவட்ட அபிவிருத்தி உதவியாளர் ஒன்றியத்தின் மேதின அறைகூவல்-

tyttஅரச சேவையில் நீண்ட பயணத்தை நோக்கி தேசத்தின் அபிவிருத்திக்கும் மக்களுக்குமான உன்னத பணியை கடந்த 10 வருடங்களாக முன்னெடுத்துவரும் அபிவிருத்தி உதவியாளராகிய நாம், இன்று உழைக்கும் வர்க்கமாகிய உலக தொழிலாளர்களை போற்றி வணங்கும் புனித தினமாகிய மே 01ம் நாள், நாம் அனைவரும் எமது தொழிலாளர்களது உரிமைகளை உறுதிப்படுத்தும் முகமாகவும் எமது மக்களுக்கான சேவையினை முன்நிறுத்தியும் எமது நீண்ட பயணத்தினை முன்னெடுத்தும் இவ்புனித நந்நாளில் நாம் அனைவரும் தேசத்தின் அபிவிருத்துக்கும் ஒற்றுமைக்காகவும் உழைப்போம் என உறுதியெடுத்துக் கொள்வோமாக ! ! !

யாழ் மாவட்ட அபிவிருத்தி உதவியாளர் ஒன்றியம், யாழ்ப்பாணம்.

சின்னத்தம்பி உதயசிறி விடுதலை-

uthayasri sசிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறைவைக்கப்பட்டிருந்த சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயசிறிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்றே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். எனினும், உதயசிறியை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று வரை அவரது விடுதலைக்கு தடையாக இருந்து வந்தது. இந்நிலையில் உதயசிறி, சார்பில் வழக்குத் தொடர்ந்த நல்லாட்சிக்கான மனித உரிமைகள் இயக்கமும், மனித உரிமைகள் இல்லமும் கண்டி மேல் நீதிமன்றத்தில் வைத்து நேற்று வழக்கை விலக்கிக்கொண்டதை அடுத்து உதயசிறியை உடனடியாக விடுவிப்பதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த அறிவித்தல் நேற்று மாலையளவிலேயே தமக்குக் கிடைக்கப்பெற்றதால் உதயசிறியை இன்று அழைத்துவரப் போவதாக உதயசிறியின் உறவினர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். அதன்படி உதயசிறி சரியாக இரண்டரை மாதங்களுக்குப் பின் சிறையிலிருந்து தனது வீட்டுக்கு திரும்புகின்றார். 

19ஐ எதிர்த்த வீரசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை-

weerasekaraஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூல வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றபோது சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்த சரத் வீரசேகர எம்.பிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்த நிலையில், அது தொடர்பில் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, அக்கட்சியின் எம்.பிக்கள் அனைவரும் மேற்படி திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த போதிலும், சரத் வீரசேகர எம்.பி மாத்திரம், சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தார். கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

19ம் திருத்தச் சட்டத்துக்கு பிரித்தானியா வரவேற்பு-

british19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு பிரித்தானியா வரவேற்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ், ஜனாதிபதியை சந்தித்த போது இதற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அவர் தமது தகுதி பத்திரத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்திருந்தார். அதேநேரம் பிரான்ஸ், பஹ்ரெயின், க்ரோஷியா மற்றும் ஹங்கேரி ஆகிய மேலும் நான்கு நாடுகளின் தூதுவர்கள் தங்களின் தகுதி பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

சிதம்பரபுரம் மலரும் மொட்டுக்கள் முன்பள்ளிக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகம் நிதியுதவி-

moddukal01 moddukal02 moddukal03 moddukal04தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கனடா கிளையினரால் வழங்கப்பட்ட சிறுவர்களின் விளையாட்டு நிகழ்வுக்கான சீருடைகளை தயார் செய்வதற்கான ஒருதொகைப் பணம் கற்குளம்-1, மலரும் மொட்டுக்கள் முன்பள்ளி நிர்வாகத்திடம் இன்று (30.04.2015) வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ் நிகழ்வில் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் திரு க.சிவநேசன்(பவன்), திரு இ.மகேந்திரன் (ஐயா) சிரேஷ்ட உறுப்பினர்-புளொட்), தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவர் திரு சு.காண்டீபன், பொருளாளர் திரு த.நிகேதன், முன்பள்ளி ஆசிரியர்களான திருமதி எஸ்.கஸ்தூரி, செல்வி பி.ஜனார்த்தனி, கற்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் திரு மாதவன், முகாமைத்துவ குழு தலைவி திருமதி த.சுஜனந்தினி, மகளிர் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் திருமதி கி.துசாந்தினி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் (புளொட்) இணைந்து தமிழ் தேசிய இளைஞர் கழகம் பல உதவிகளை சிதம்பரபுரம் மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Armed struggle destroyed TAMILS

sithadthanLeader of People’s Liberatio n Organization of Tamil Eelam (PLOTE) and Northern Provincial Councillor Tharmalingam Sithadthan said, there are allegations against his organization on killings and abductions. If the allegations are proven the culprits should be punished. There is no second question about it “I have no problem about it. However, as an organization we never allowed such acts,” he said.  Following are excerpts:

Ceylontoday, 2015-04-28 By Mirudhula Thambiah

Leader of People’s Liberatio n Organization of Tamil Eelam (PLOTE) and Northern Provincial Councillor Tharmalingam Sithadthan said, there are allegations against his organization on killings and abductions. If the allegations are proven the culprits should be punished. There is no second question about it “I have no problem about it. However, as an organization we never allowed such acts,” he said.  Following are excerpts:

?
: Do you feel the 100-day programme fulfilled the aspirations of the Tamil people
A: As far as the Tamils are concerned I don’t see any change. Even though the people voted only to see the former government out of power, but still there was an expectation that they can have some sort of change in their lives. They are unable to see that!
We know that a political solution cannot be reached within a short period of time. Also they did not promise that a solution will be given in 100-days, but said it will be addressed after elections.
Yet, day to day issues should be looked into in the 100 day programme. Generally we feel nothing has happened in the 100-day programme. Read more

19 வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றம்-

parliamentநல்லாட்சி அரசாங்கத்தின் 19ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் மீதான 3ஆம் வாசிப்பு நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குழுநிலை விவாதத்தின் பின்னரான இறுதி வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 212 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன. பிரேரணைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்;டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வாக்களித்துள்ளார். இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரேமலால் ஜயசேகர, சுசந்த புஞ்சிநிலமே, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், ஜனக பண்டார, மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட7பேர் சபையில் பிரச்சனமாகியிருக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

நேபாளத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு-

nepal quakeநேபாளத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களை நினைவு கூறும் முகமாக மூன்று நாட்களுக்கு துக்க தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நேபாள நிலநடுக்கத்தில் சுமார் 5ஆயிரம் பேர்வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தமது அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும், இயற்கை அனர்த்தத்தின் பாதிப்புகள் அவற்றை விஞ்சியுள்ளதாக நேபாள பிரதமர் சுசில் கொய்ராலா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை, இந்தியா, சீனா, அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் உள்ளிட்ட நேபாளத்தின் நட்பு நாடுகள் அங்கு இடம்பெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவி வருகின்றன. ஹிமாலயப் பிரதேசத்தில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக நேபாள பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அடைமழை காலநி;லையையும் பொருட்படுத்தாது நேபாள மக்கள் திறந்த வெளிகளில் கூடாரங்கள் மற்றும் பொது இடங்களில் தங்கியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையர் உள்ளிட்ட 8 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்-

courtsஇலங்கையர் ஒருவர் உள்ளிட்ட 8 பேருக்கு இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த அவுஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் மற்றும் ஆண்ட்ரூ சான் ஆகியோருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளில் 9வது நபரான பிலிப்பீன்ஸ் பெண்ணொருவருக்கு இறுதிநேரத்தில் மரணத்தண்டனை பிற்போடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பிரஜாவுரிமை பெற்ற மயுரன் சுகுமாரன் மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதை அடுத்து இந்தோனேசியாவிற்கான தூதுவரை அவுஸ்திரேலியா மீளழைத்துள்ளது. இந்த சம்பவம் கொடூரமானதும், அனாவசியமான செயற்பாடு எனவும் ஆஸி பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்-

aarpattam (2)தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. பட்டதாரி கல்வி நெறி நிறைவடைந்து சுமார் 4ஆண்டுகள் பூர்த்தியாகின்ற போதிலும் இதுவரை தமக்கு எவ்வித நியமனங்களும் கிடைக்கவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர், மாகாண ஆளுநர் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. வட மாகாண பட்டதாரிகள் சங்கத்தினரின் குற்றச்சாட்டுக்கள் குறித்து வட மாகாண முதலமைச்சின் இணைப்புச் செயலாளர் எஸ் சண்முகப்பிரியன் கூறுகையில், மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்புகளுக்கு அமைய பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தொடர்ந்தும் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் இணைப்புச் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மேயர் கைது-

hampantota mayorஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் கைதில் இருந்த ஒருவரை தாக்க முயற்சி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக உள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் தொடர்ந்தும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோ, விசேட பொலிஸ் விசாரணை குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறான குற்றச்சாட்டுகளை அடிப்படையாக கொண்டே அவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை பலவந்தமாக கடத்தியது, ஹம்பாந்தோட்டைக்கு சென்ற ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்குகின்றன.

வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளரிடம் விசாரணை-

police ...வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகம் வீரசிங்கஹ மற்றும் மேலதிக பணிப்பாளர் நாயகம் அமரசேகர ஆகியோரிடம் நிதி மோசடி விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலேயே இவ்விருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

நேபாள நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 4,352ஆக உயர்வு-

nepalssssநேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 352ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தில் காயமடைந்த 8 ஆயிரத்து 63 பேர் இதுவரை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 60 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் சுஷில் கொய்ராலா, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போதிய அளவில் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், மக்களை மீட்பதற்கே அரசு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருவதாக கூறிய கொய்ராலா, காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் வழங்குவதற்கு மக்கள் முன் வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனிடையே அடுத்தடுத்த நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் தெருக்களிலேயே தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகாரங்கள் குறைக்கப்படுவது ஆரோக்கியமான அறிகுறியே-இரா.சம்பந்தன்-

Sampanthan (3)மீண்டும் ஜனாதிபதியாக விரும்பாத அருமையானதொரு ஜனாதிபதியொருவர் எமக்கு கிடைத்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இதுவோர் ஆரோக்கியமான அறிகுறியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம், நேற்று ஆரம்பமானது. சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியதன் பின்னர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் மேற்படி திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கருத்துரை வழங்கினர். இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கருத்துரைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய இரா.சம்பந்தன், ‘நாடாளுமன்றத்தின் மீது எந்த நேரத்திலும் பாரிய தீங்கை விளைவிக்கக்கூடிய ஒன்றாக அரசியலமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டம் இருந்தது. அது, ஜனாதிபதியின் தயவில் நாடாளுமன்றம் தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்தியிருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரத லக்ஷமன் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு-

courtsமுன்னாள் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகர் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர கொலை வழக்கு மே மாதம் 22ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பவித்ரா தென்னகோன் வழக்கை ஒத்திவைத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகள் 12 பேர் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜரானபோதும் பிரதான பிரதிவாதி பிரியந்த ஜனக்க என்பவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. குறித்த நபருக்கு அழைப்பாணை விடுப்பதில் சிக்கல் உள்ளதாகவும் அதனை செய்ய முடியாது போனால் அவர் இன்றி விசாரணை நடத்துமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார். இதேவேளை, குறித்த வழக்கின் பிரதிவாதியான சமிந்த டி ஜயனாத் 10 லட்சம் பெறுமதியா இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் இருந்து 42 பேர் நாடு திரும்ஏற்பாடு-

flightநேபாளம் – காத்மண்டு நோக்கி நேற்று முன்தினம் சென்றிருந்த இலங்கை வான்படையின் வானூர்தி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளது. அதில், அங்கு தங்கியிருந்த 42 பேர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வான்படையினர் தெரிவித்துள்ளனர். அவர்களில் 14 வயதுக்கு உட்பட்ட மகளிர் காற்பந்தாட்ட அணியின் உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி பிற்பகல் 1.30 அளவில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் மீட்பு குழுவொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்மண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களை ஏற்றிச் சென்ற வானுர்தியிலேயே தற்போது குறித்த 42 இலங்கையர்களும் அழைத்துவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கைக்கு விஜயம்-

john heryஅமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி இலங்கை வரவுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வரவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை வரும் அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். அத்துடன் சர்வகட்சித் தலைவர்களையும், பொது அமைப்பு பிரமுகர்களையும் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ஜோன் கெர்ரியின் இலங்கைக்கான முதலாவது விஜயம் என்பதுடன், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஒருவர் 11 வருடங்களுக்கு பின் இலங்கை வருவது இதுவே முதல்முறையாகும்.

வெள்ளை வேன் விடயமாக, மூவர் தொடர்பில் இரகசிய அறிக்கை-

white vanகடந்த அரசாங்கத்தின் காலக்கட்டத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல் வாதிகள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை கடத்திச்சென்று காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் வெள்ளைவேன் நடவடிக்கைகளில் பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் மூவர் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் தொடர்பிலான இரகசிய அறிக்கைகள் இரண்டு, அடுத்தவாரம் நடைபெறவிருக்கின்ற பாதுகாப்பு சபையில் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலர் மற்றும் பாதுப்பு படைகளின் முக்கியஸ்தர்கள் இந்த பாதுகாப்பு சபையில் பங்கேற்பர். வெள்ளைவான் நடவடிக்கை தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படைகளின் முக்கியஸ்தர்கள் மூவரில் இருவர் ஓய்வு பெற்றுவிட்டதாகவும் அவர்கள் தொடர்பிலும் அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் தனியான இரகசிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்போது சேவையில் இருக்கின்ற மேஜர் தரத்தைச்சேர்ந்த அதிகாரி தொடர்பில் தனியான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இரகசிய அறிக்கைகள் இரண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்படவிருப்பதாக மக்கள் சமாதானம் அமைச்சு அறிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு-

shiraniமுன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் விவரங்களை வெளியிடாமைக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்ட முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்லமுடியுமா என்பது தொடர்பில் பிரதிவாதி தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கடிதம் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது. இதனையடுத்தே, மேற்படி வழக்கை ஜூலை மாதம் 21ஆம் திகதிக்கு பிரதான நீதவான் ஒத்திவைத்தார்.

பசில் ராஜபக்ச எம்.பி.க்கு விடுமுறை, நால்வர் இடைநிறுத்தம்-

basilநாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு நாடாளுமன்றம் விடுமுறை வழங்கியுள்ளது. இதேவேளை ஊவா மாகாணசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, மாகாணசபை செயலாளருக்கு அறிவித்துள்ளார். ஊவா மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றுவதற்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நால்வரும் விலக்கப்பட்டுள்ளனர். அநுர விதானகமகே, வடிவேல் சுரேஸ், கித்சிறி சேனாரத் அத்தநாயக்க மற்றும் ஹரேந்திர தர்மதாஸ ஆகியோரே இந்த நால்வரும் என்பது குறிப்பிடக்கூடியது.

இலங்கையின் 2ஆவது உதவிக்குழு நேபாளம் புறப்பட்டது-

nepal nepalபாரிய நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு உதவி வழங்கும் பொருட்டு இரண்டாவது குழு இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளது. விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் அடங்கிய 156 பேரைக் கொண்ட குழுவே நேற்று திங்கட்கிழமை நேபாளத்தை நோக்கி சென்றுள்ளது. பாதிப்;புக்குள்ளான நேபாள நாட்டுக்கு உதவி வழங்குவதற்காக இராணுவ வைத்திய படையணி, பொறியியல் ரெஜிமெண்ட் ஆகியன நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நேபாளத்திற்கு சென்றடைந்தது. அக்குழுவில் 4 விசேட வைத்திய நிபுணர்களும் 40 இராணுவத்தினரும் உள்ளடங்குகின்றனர். முதலாவது குழுவானது மேஜர் ஜெனரல் மைத்திரி டயஸ்- தலைமையிலும் இரண்டாம் குழுவிற்கு பிரிகேடியரொருவரும் கட்டளைத் தளபதியாக செயற்படடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேபாள நிலநடுக்கத்தில் 3218ற்கும் மேற்பட்டோர் பலி-

nepal quakeநேபாளத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3218 ஐத் தாண்டியுள்ளது. மேலும் நிலநடுக்கம் எவரெஸ்ட் மலையில் ஏற்படுத்திய பனிச்சரிவுகளில் சிக்கி 17பேர் உயிரிழந்துள்ளனர். காத்மண்டுவில் குறைந்தது ஐந்து இடங்களில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலகுவில் சென்றடைய முடியாத பல பிரதேசங்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் நிலநடுக்கத்தின் உயிரிழப்புகள் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று ஊகிக்கப்படுகின்றது. நகர மத்தியில் உள்ள திறந்தவெளி மைதானம் ஒன்றில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடாரங்களுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். குடியிருப்புகளை இழந்தவர்களும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அஞ்சியவர்களுமாக பெருமளவிலானவர்கள், குளிரையும் ஈரத்தையும் தாங்கிக்கொண்டு இரவுப்பொழுதை வெளியிலேயே கழித்துள்ளனர். இயற்கைப் பேரழிவால் திணறுகின்ற நேபாள அரசுக்கு உதவுவதற்கு வெளிநாட்டுத் தலைவர்களுடன் தொண்டுநிறுவனங்களும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு சட்டமூலங்கள் குறித்த மனு விசாரணை ஒத்திவைப்பு-

courts (2)தகவல் அறிந்து கொள்ளும் சட்டம்மூலம் கணக்காய்வாளர் சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுமீதான விசாரணை பிற்போடப்பட்டுள்ளது. சட்டமூலங்களை ஆராயவென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதிபதிகளான ரோஹன ரணசிங்க, பிரியந்த ஜயவர்த்தன ஆகியோர் கொண்டு நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனினும் 19வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றில் இடம்பெறுவதால் அது முடிந்த பின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதனால் எதிர்வரும் நாள் ஒன்றில் மனு மீதான விசாரணை இடம்பெறும் என்றும் உயர் நீதிமன்றம் திகதி அறிவிக்குமென கூறப்படுகிறது.

சோபித்த தேரர் தலைமையிலான சத்தியாக்கிரகம் நிறைவு-

sofithar19வது திருத்தச் சட்டம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை அடுத்து மாதுலுவாவே சோபித்த தேரர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரம் நிறைவுக்கு வந்துள்ளது. 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி பல அமைப்புக்கள் இணைந்து இன்று காலை ராஜகிரியவில் சத்தியாக்கிரகம் ஒன்றை ஆரம்பித்தனர். பொரளை கோட்டே வீதி என்.எம்.பெரேராவின் உருவச் சிலைக்கு அருகில் ஆரம்பமான பேரணி கொழும்பு சுதந்திர சதுக்கம் வரைசென்று அங்கு சத்தியாக்கிரம் இடம்பெற்றது.

ஊடகங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் சரத்து நீக்கம்-

nimal19வது திருத்தச் சட்டத்தில் ஊடகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காணப்பட்ட சரத்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் இன்று கூடியபோது விசேட உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் குறித்த சரத்தின் மூலம் ஊடகங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கக் கூடிய வகையில் அமைந்திருந்ததாக நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

வலி மேற்கு பிரதேச சபையில் உலக குடிநீர் நிகழ்வுகள்-

dfddddஉலக குடி நீர் தினத்தின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகளில் வலி மேற்கு பிரதேச சபையின் கலச்சார மண்டபத்தில வேள்விசன் நிறுவனத்தின் அனுசரணையில் வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது பிரதேச பாhடசாலை மாணவர்களில் கல்விப் பொதுத் தராதர உயர் தர வகுப்பு மாணவர்கட்கு நீர் தொடர்பிலான விழிப்புணர்வு மற்றும் நீர் மாசுறுதல் மற்றும் அவற்றை தடுக்கும் வழி முறைகள் என்பன தொடர்பில் கருத்துப் பகிர்வு இடம்பெற்றது இவ் நிகழ்வில் நீர் சபையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு செய்முறை மற்றும் ஏனைய வழிகளிலும்; கருத்துப் பகிர்வை வழங்கினர்.

யாழ் ஊடகவியலாளருக்கு தொடர்ந்து விளக்கமறியல்-

courtsயாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளரை தொடர்ந்தும் மே 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது எனினும் அவருடன் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட்ட மூன்று பேரும் ஆட்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் குழப்பம் விளைவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு பிணை வழங்க காவல்துறையினர் எதிர்ப்பு வெளியிட்ட கரணமாகவே நீதிமன்றம் அவரின் விளக்கமறியல் காலத்தை நீடித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய ராணுவத் தளபதியின் விஜயம் ஒத்திவைப்பு-

indian armyஇந்திய ராணுவத் தளபதி ஜெனரல் டள்பீர் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தரைப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நட்புறவு மற்றும் அன்னியோன்னிய ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் அவரது விஜயம் இடம்பெறவிருந்தது. எனினும், அவசர நிலைமைகளை கருத்தில் கொண்டு மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை அவரது விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக அங்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக நிவாரண பணிகளில் இந்திய ராணுவத் தளபதி பங்களிப்பு செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேபாள நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு-

nepal nepalநேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000 இனையும் தாண்டியுள்ளது. இதுவரை 3,218 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ் அனர்த்தத்தில் 6,500 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ முகவராண்மையை மேற்கோள்காட்டி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. நேபாளம் மட்டுமன்றி இந்தியா மற்றும் பங்களாதேஷிலும் நில நடுக்கத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பலர் தமது இருப்பிடங்களுக்கு செல்ல பயந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா கபடிப் போட்டியில் தமிழ் தேசிய இளைஞர் கழகம் வெற்றி-

fgfgfffவவுனியா பிரதேச 27ஆவது இளைஞர் விளையாட்டு விழாவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நேற்று 26.04.2015 ஞாயிற்றுக்கிழமை கபடி மற்றும் எல்லே போட்டிகள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. கபடிப் போட்டியின் இறுதிப் போட்டியில் உதயதாரகை அணியினை வெற்றி கொண்டதன்மூலம் தமிழ் தேசிய இளைஞர் கழகம் சம்பியனானது. கோவில்குளம் இளைஞர் கழகம் பெயர் மாற்றப்பட்டு தற்போது தமிழ் தேசிய இளைஞர் கழகமாக செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இணுவையூர் குமர நர்த்தனாலய வருடாந்த பரிசளிப்பு விழா-(படங்கள் இணைப்பு)

inuvaiyur08யாழ். இணுவையூர் குமர நர்த்தனாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வானது இணுவில் மேற்கு குமர நர்த்தனாலய மண்டபத்தில இன்று நடைபெற்றது. மன்ற நிர்வாகி நிருத்திய வேந்தன் நடராஜா குமாரவேல் அவர்களின் ஏற்பாட்டில் செல்வன் கணேசலிங்கம் பவன் அவர்களின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். Read more

தந்தை செல்வாவின் 38ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு-

thanthaiதந்தை செல்வாவின் 38ஆவது நினைவு நாளான இன்றுகாலை 9.30மணிக்கு யாழ்ப்பாணம், தந்தை செல்வா சதுக்கத்திலுள்ள நினைவிடத்தில் அஞ்சலியும் நினைவுப் பேருரையும் இடம்பெற்றது. தந்தை செல்வா அறங்காவலர் குழுத் தலைவர் பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்களது தலைமையில் இந் நினைவுதின நிகழ்வு இடம்பெற்றது. சட்டத்தரணி கனகமனோகரன், தந்தை செல்வநாயகம் அவர்களின் புதல்வர் சந்திரகாசன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, மறவன்புலவு சச்சிதானந்தம், புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். நினைவுப் பேருiரையினை கனடாவிலிருந்து வருகைதந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சட்டத்தரணி திரு. கனகமனோகரன் அவர்கள் வழங்கினார்.