அமரர் தோழர் எட்வேட் வில்சன் அவர்களின் இறுதிக்கிரிகைகள் 09.04.2015 வியாழக்கிழமை

img141யாழ். புலோலி, பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், வவுனியாவை வாழ்விடமாகவும்,  பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு.திருமதி சூசைதாசன், ரஜினா ரட்னமணி அவர்களின் அன்பு மகன் எட்வேட் வில்சன் அவர்கள் 25.03.2015 புதன்கிழமை பிரான்ஸில் மரணமெய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் தவச்செல்வியின் அன்புக் கணவரும், கார்மேகவர்ணன், சுவேதனா, துவாரகன் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார். முன்னர் ஈழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புகளை பேணிவந்த இவர் அண்மைக்காலங்களாக பிரான்ஸ் நாட்டில் எமது அமைப்பின் செயற்பாட்டாளராக இயங்கி வந்தார்.அண்மைக்காலமாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த எட்வேட் வில்சன் அவர்கள் (25.03.2015) புதன்கிழமை மரணமெய்தியுள்ளார்,
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

பார்வைக்காக   Iavene marechal juin 95190 gonesse என்னும் இடத்தில் 11.00 தொடக்கம் 14.00 மணிவரை வைக்கப்பட்டு.

பின்னர்  Church 5rue sinon bolivar 95190 gossainville என்னும் முகவரியில் உள்ள தேவாலயத்தில் 14.30 தொடக்கம் 16.00 வரை பிரார்த்தனைகள் நடைபெற்று. 

19.Route de roissy 95190 goussainvill  என்னும் முகவரியில் உள்ள மயானத்தில் 16.00 தொடக்கம் 16.30 மணிவரை இறுதி வணக்கம் செலுத்தி அன்னாரின் பூதவுடல் அடக்கம் செய்யப்படும் என அறியத்தந்துள்ளார்கள்.

மேலதிக விபரங்களுக்கு: ஜோன்சன்-0033 652388554,  சுகுமார்-0033 751179646  ரவி -0033 652270142