Header image alt text

யாழ். கைலாசநாதர் கோவில் பிரதம குருக்களின் அஞ்சலிக் கூட்டமும், புதிய பிரதம குருக்கள் நியமனமும்-(படங்கள் இணைப்பு)

kailasanathar08யாழ்ப்பாணம் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் பிரதம குருக்களாக ருந்த மணிக்குருக்கள் என்றழைக்கப்படும் வைத்தீஸ்வரக் குருக்களின் அஞ்சலிக் கூட்டமும், கைலாசநாதர் கோவிலின் புதிய பிரதம குருக்களை நியமிக்கும் வைபவமும் கடந்த 11.04.2015 அன்று ஸ்ரீ கைலாசநாதர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. ந்த வைபவத்தில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. என். வேதநாயகன் அவர்களும் விசேட அதிதிகளாக பிரதம குருக்கள், சிவாச்சாரியாகர்கள் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்கள் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், அனந்தி சசிதரன் ஆகியோரும் கலந்துகொண்டு மணிக் குருக்களின் சேவைகளையும், சமூகப் பணிகளையும், அவருடைய ஆன்மீகப் பணிகளையும் எடுத்துக் கூறினார்கள். அத்துடன் புதிய பிரதம குருக்களாக குருசாமிக் குருக்களின் வைபவரீதியிலான நியமனமும் டம்பெற்றது. வ் வைபவத்தில் ந்தியாவிலிருந்து பிரத்தியேகமாக மணிக்குருக்களின் சகோதரர் கோபாலசர்மா அவர்களும் கலந்துகொண்டிருந்தார். Read more

வலி வடக்கில் இரண்டாம் கட்டமாக காணிகள் கையளிப்பு..!! (படங்கள் இணைப்பு)

kadduvan07வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டமாக வலி வடக்கில் இராணுவம் வசம் இருந்த பொது மக்களின் காணிகளில் ஒரு பகுதி (13.04.15) கடந்த திங்களன்று தெல்லிப்பளையின் வறுத்தலைவிளான் பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் தமது இடங்களை குடும்பத்துடன் வந்து பார்வையிட்டனர்.
எனினும் இன்று கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட தைஜிட்டி தெற்கு, மயிலிட்டி, வீமன்காமம் போன்ற பிரதேசங்கள்  இன்னும் கையளிக்கப்படவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதே நேரம் கையளிக்கப்பட்ட தங்கள் இடத்தை பார்வையிட்ட போது பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். அவர்களுடைய வீடுகள் இருந்த இடமே தெரியவில்லை மேலும் பாடசாலைகள், கோயில்கள் எல்லாம் அழிந்து அவர்கள் வாழ்ந்த ஊர் காடாய் காட்சியழித்தது. நமது போர் தந்த வடுவும் அதன் எச்சமும் Read more