சோமவன்ச -தேர்தல் ஆணையாளர் சந்திப்பு

soma-wansaபுதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளருமான சோமவன்ச அமரசிங்கவுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கட்சிக்கான சின்னம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்

சோமவன்சவை தடுக்க, ஜே.வி.பி பிரயத்தனம்

JVPமக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளருமான சோமவன்ச அமரசிங்கவை மீண்டும் கட்சிக்குள் இணைந்துகொள்வதற்கு தேவையான சகல முயற்சிகளையும் முன்னெடுப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின்  அரசியல் சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கட்சியில் தான் வகித்த சகல பதவிகளிலிருந்தும் நேற்று வியாழக்கிழமை இராஜினாமா செய்த சோமவன்ச அமரசிங்க, புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றார்.
இந்நிலையில், கட்சி தொடர்பில் கிளம்பியுள்ள வதந்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரசார செயலாளருமான விஜித்த ஹேரத் தெரிவித்தள்ளார்.

19ஆவது திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

19அரசியலமைப்பில் மேற்கொள்ளவுள்ள 19ஆவது திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள், இன்று வெள்ளிக்கிழமை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் அதிகாரங்கள் சிலவற்றை குறைக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 19ஆவது திருத்தத்துக்காக சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூல திருத்தத்துக்கே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
19ஆவது திருத்தத்தில் சில உறுப்புரைகளை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்து, அதுதொடர்பில் சபாநாயகருக்கும் அறிவித்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போதே எதிர்க்கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சித்தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை 20ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளனர்.

மத்தியஸ்தம் வகிக்க இந்தியா பொருத்தமில்லாத நாடு – தயான்

thajanஇலங்கையின் இனப்பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தியா பொருத்தமில்லாத நாடு என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார். ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் உணர்வோடு இந்தியா சம்பந்தப்பட்டுள்ளதாலும், தேர்தல்களில் இலங்கை பிரச்சினை பெரிதும் செல்வாக்கு செலுத்துவதாலும் இந்தியாவுக்கு இந்த தகுதி இல்லையென அவர் கூறியுள்ளார்.

இலங்கை போரில் இந்திய அமைதிப்படை கொடூரமாக செத்துக்கொண்டிருந்த போதுகூட சென்னையின் அழுத்தம் காரணமாக புலிகளை முழுமையாக அழிக்க இந்திய அரசாங்கம் முயலவில்லை என ஜயதிலக்க மேலும் கூறியுள்ளார்.

இனப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டுக்கு மீண்டும் கதவைத் திறந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பக்க சாய்வை கண்டித்துள்ள ஜயதிலக்க, இந்தியாவிடம், தங்கியிருப்பதனால் தமிழ் பிரிவினை வாதத்திலிருந்தும் தனிநாட்டு கோரிக்கையிலிருந்தும் இலங்கையை காப்பாற்ற முடியாதென கூறினார்.

இந்த வகையில், தேர்தல் முக்கியத்துவம் உள்ள தமிழ் குடிவரவாளர்களை சந்தோஷப்படுத்த வேண்டியுள்ள சில மேற்கத்தேய நாடுகளும் இனப்பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க தகுதியில்லாதவை என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் தாம் எதிர்பார்க்கும் பொதுவான அரசியல் தீர்வை ஆயர் தலமையில் வெளியிட வேண்டும் – வடமாகாண முதலமைச்சர்

vikiபுலம்பெயர், உள்நாட்டு தமிழ் பேசும் மக்கள், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்து எப்பேர்ப்பட்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை அறிந்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் 75ஆவது அகவைப் பூர்த்தி நிகழ்வு மன்னார் ஆயரின் வாசஸ்தலத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆயர் இவ்வாறு கூறினார்.            அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், Read more