700 பேருடன் சென்ற படகு விபத்து – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

boatசுமார் 700 பேருடன் ஐரோப்பா நோக்கிச் சென்ற படகு ஒன்று தெற்கு இத்தாலியைச் சேர்ந்த லம்பெடுசா தீவின் அருகே திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் அந்தப் படகில் இருந்த 700-க்கும் மேற்பட்டோர் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களில் 28 பேர் மட்டுமே உயிருடன் நீந்தி கரைக்கு திரும்பியுள்ள நிலையில் இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இவ்விபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன் இத்தாலி நாட்டு கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையை சேர்ந்த கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.