லிழிநீர் அஞ்சலிகள் – அமரர் மனுவேல்பிள்ளை அன்னமலர் அவர்கள்
யாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட மனுவேல்பிள்ளை அன்னமலர் (இளைப்பாறிய ஆசிரியை) அவர்கள் 20-04-2015 திங்கட்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை (அதிபர்) அருள்மேரி தம்பதிகளின் மகளும், மேரிசறோஜா, அருளானந்தம், மரியநாயகம், சேவியர் தனிநாயகம், அன்னபாக்கியம், அன்ரன் திருச்செல்வம் ஆகியோரின் சகோதரியும்,
கணபதிப்பிள்ளை ரஞ்சிதமலர் சத்தியசோதி வசந்தி ஆகியோரின் மைத்துனியும், சுதர்சினி ஜெகதீபன் நவதீபன் ஜனாதீபன் துஷ்யந்தினி ஆகியோரின் சித்தியும், கிரிசாந்தினி, நிசாந்தன், துஷ்யந்தன், யூட் நிறோஜன், அருணன், வில்சன், ரமணன் ஆகியோரின் அத்தையும், ரிஷிகாந், கௌசிகாந் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.