கிளிநொச்சி, திருவையாறு முன்மாதிரி கல்வி நிலையத்திற்கு நிதியுதவி-

ffgfgffதமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான ஊக்குவிப்பு செயற்திட்டத்தின் கீழ், கற்றலுடன் களநிலைக் கல்வியும் மாணவ வாழ்வியலில் அத்தியாவசியம் என்பதனை கருத்தில் கொண்டு திருவையாறு இளைஞர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து புளொட் தலைவரும், வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பணிப்புரைக்கமைய நேற்று (08.05.2015) கள நிலைக் கல்விக்கான ஒருதொகைப் பணம் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் இளைஞர் கழக ஸ்தாபகரும், புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), புளொட்டின் கிளிநொச்சி கிளை முக்கியஸ்தர் திரு வே. சிவபாலசுப்ரமணியம், தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவர் திரு சு.காண்டீபன், கழக கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திரு சோ.சுரேந்தர், கழகத்தின் பொருளாளர் திரு.த.நிகேதன், கழக சிரேஷ்ட உறுப்பினர் திரு.எஸ்.சுரேஷ்குமார் ஆகியோருடன் திருவையாறு இளைஞர்களும் கலந்துகொண்டிருந்தனர்.