Header image alt text

கண்டனப் பேரணி ,யாழ். பொலிஸ் நிலையம் முற்றுகை, மாவை சமாதானம், பத்தாவது நபர் தப்பியோட முயற்சி

viddiyaa_pro_011 yaal yaal01 viddiyaa_pro_003

 

 

 

புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு நீதி கோரி யாழ்.நகரில் கண்டன பேரணி சென்றவர்கள் யாழ் பொலிஸ் நிலையத்தை முற்கையிட முயன்றதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை யாழ். நகரில் உள்ள அநேகமான பாடசாலை மாணவர்கள் வீதிகளில் இறங்கி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 
பொலிஸ் நிலையங்கள் நீதிமன்றங்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். யாழ்ப்பாணத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆர்ப்பாட்டம் செய்யும் பொதுமக்களை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் சென்று சமாதானம் செய்து வருகின்றார்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சிக்கிய பத்தாவது நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு முயற்சித்துள்ளார். இவர் வழக்கறிஞர் ஒருவர் ஊடாக தப்பி ஓடும் பொழுது பொது மக்கள் அவரை பிடித்து தருமாறு பொலிஸாரிடம் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்து வித்தியா கொலை வழக்கில் சிக்கி இருப்பதாக கூறப்படுகின்றது.

புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்.

yazl_vithya_02யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த ஆரப்பாட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பாடசாலைகளில், மற்றும் யாழ்.நகரப்பகுதியில் மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் தவிர்ந்த மற்றய கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
பாடசாலைகளில் மாணவர்கள வீதிக்கு இறங்கி தொடர் ஆர்ப்பாட்டத்தை தற்போது முன்னெடுத்து வரும் நிலையில் குடாநாட்டின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கண்டன ஊர்வலம்.- வித்தியாவின் கொலையை கண்டித்து வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக கொரப்பத்தான வீதியில் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கொரப்பத்தான் வீதியூடாக ஊர்வலமாக பாடசாலையை சென்றடைந்திருந்தனர்
pundudu_manaviசந்தேகநபர்கள் மீது தாக்குதல்:- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதான சந்தேக நபர்களை மருத்துவ ஆய்வு செய்வதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரால் அழைத்து சென்றபோது பொதுமக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு சந்தேக நபர்களை தாக்கியுள்ளனர்.

மேலும் செய்திகளை வாசிக்க Read more

மே 18 இல் த.தே.கூ தலைவர் அறிக்கைகள்

Sampanthan (3)இன்று மே 18ஆம் திகதி. இன்றைய நாள் தமிழரின் தேசிய துக்க நாளாகும் – போரால் எமது இனம் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட நாளாகும் – இழந்த எமது உறவுகளுக்கு சுடர் ஏற்றி – அஞ்சலி செலுத்தி நினைவு கூரும் நாளாகும்.   இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் – முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளில் இரா சம்பந்தன் கூற்று   

இலங்கையின் சரித்திரத்தில் போர் என்பது முக்கிய அம்சமாகக் கருதப்பட வேண்டும். இந்தப் போர் காரணமாக எல்லா இனத்தவர்களும் உயிரிழப்புகளை – துன்ப, துயரங்களை எதிர்நோக்கினர். இது எல்லோருக்கும் படிப்பினையாகும்.
எனினும், இந்தப் போர் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்குப் பாரிய இழப்புகளைக் கொடுத்துள்ளது. இதனால் எமது தமிழ் மக்கள் உறவுகளை இழந்தனர் உறவுகளைத் தொலைத்தனர். அவர்களின் சொந்த வீடுகள், சொத்துகள் அழிந்தன.
இலங்கையிலுள்ள இனப்பிரச்சினைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் அரசியல் தீர்வு கண்டிருந்தால் இந்தப் போர் இடம்பெற்றிருக்கமாட்டாது. இந்நாட்டில் மீண்டும் போர் இடம்பெறக்கூடாது என்பதே எமது விருப்பமாகும்.
எனவே, தற்போது ஆட்சியிலுள்ள அரசு தேசிய இனப்பிரச்சினைக்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வை உடன் காணவேண்டும். இன்று மே 18ஆம் திகதி. இன்றைய நாள் தமிழருக்கு தேசிய துக்க நாளாகும்; போரால் எமது இனம் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட நாளாகும்; இழந்த எமது உறவுகளுக்கு சுடர் ஏற்றி – அஞ்சலி செலுத்தி நினைவுகூரும் நாளாகும்.
எனவே, தமிழர்களாகிய நாம் அனைவரும் இதனைச் செய்வோமாக. உயிரிழந்த உறவுகளுக்கு நாம் இவ்வாறு செய்வதன் ஊடாக எமது மனவேதனைகளை ஓரளவு தேற்றிக்கொள்ளலாம்.
அதேவேளை, இன்றைய நாளை தேசிய துக்க நாளாக நாம் அனுஸ்டிப்பதன் மூலம் போரின்போது உயிரிழந்த எமது உறவுகளின் ஆத்மா சாந்தியடையும். 

மே 18 இல் வடக்கு முதலமைச்சர் அறிக்கைகள்

may 18முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூரும் தினத்தில் விடுக்கப்பட்ட அறிக்கை,
கடைசிக் கட்டப் போரின் போது உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளை நினைவுகூரும் நாளே இன்றைய நாளாகும். இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களை மாத்திரமன்றி உலக நாடுகளில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களினதும் நெஞ்சங்களை உலுக்கிய சோகமான செய்திகளை காவிவந்த இந்த நாளானது யுத்தத்தால் உயிரிழந்த எம் இனிய உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தும் புனித நாளாகும். Read more