கண்டனப் பேரணி ,யாழ். பொலிஸ் நிலையம் முற்றுகை, மாவை சமாதானம், பத்தாவது நபர் தப்பியோட முயற்சி

viddiyaa_pro_011 yaal yaal01 viddiyaa_pro_003

 

 

 

புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு நீதி கோரி யாழ்.நகரில் கண்டன பேரணி சென்றவர்கள் யாழ் பொலிஸ் நிலையத்தை முற்கையிட முயன்றதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை யாழ். நகரில் உள்ள அநேகமான பாடசாலை மாணவர்கள் வீதிகளில் இறங்கி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 
பொலிஸ் நிலையங்கள் நீதிமன்றங்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். யாழ்ப்பாணத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆர்ப்பாட்டம் செய்யும் பொதுமக்களை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் சென்று சமாதானம் செய்து வருகின்றார்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சிக்கிய பத்தாவது நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு முயற்சித்துள்ளார். இவர் வழக்கறிஞர் ஒருவர் ஊடாக தப்பி ஓடும் பொழுது பொது மக்கள் அவரை பிடித்து தருமாறு பொலிஸாரிடம் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்து வித்தியா கொலை வழக்கில் சிக்கி இருப்பதாக கூறப்படுகின்றது.