ராஜிவ் காந்தியின் 24வது நினைவு தினம் (தீவிரவாத எதிர்ப்பு நாள்) அனுஸ்டிப்பு

rajeev gandiதமிழ்நாட்டில் 1991, மே 21ம் தேதி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆண்டுதோறும் மே 21ம் தேதி தீவிரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவரின் 24வது நினைவு தினம் நேற்று இந்தியாவில் பல்வேறு இடங்களில் அனுஷ;டிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 
இருப்பினும், காங்கிரசின் மூத்த தலைவராக இருந்தவரும், தற்போதைய ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமித் அன்சாரியும், இந்த நினைவு அஞ்சலியில் பங்கேற்கவில்லை.
‘மத்தியில் ஆளும் பாஜ அரசின் முடிவின்படி, குடும்பம் மற்றும் கட்சியின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், ஜனாதிபதி பங்கேற்க கூடாது. இந்த அஞ்சலி கூட்டம் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்டதால், அதனை ஜனாதிபதி தவிர்த்துக் கொண்டார்’ என்று, ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.