Header image alt text

உடுவில் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா- (படங்கள் இணைப்பு)

uduvil sports  (4)யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா-2015 ஆனது உடுவில் பிரதேச செயலாளர் திரு. நந்தகோபாலன் அவர்களின் தலைமையில் நேற்று (26.05.2015) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்களான புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. பா.கஜதீபன் மற்றும் வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் திரு.பிரகாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பின்னர் போட்டிகளிலே வெற்றியீட்டியவர்களுக்கு கௌரவ மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசில்களை வழங்கினார்கள். இவ்விழாவில் வலிதெற்கு பிரதேச சபை அங்கத்தவர்கள், உடுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அரச அதிகாரிகள், ஊர்ப் பெரியோர்கள் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

இந்தியாவில் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு-

ereஇந்தியாவில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். கடும் வெயில் மற்றும் வெப்ப காற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1100ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக ஆந்திராவில் 852 பேரும், தெலுங்கானாவில் 266 பேரும் பலியாகி உள்ளனர். 

மார்ச் மாதம் துவங்கி மே 2வது வாரம் வரை பருவம் தவறி மழை பெய்து வந்தது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டாலும், கோடை வெயிலில் இருந்து தப்பித்தோம் என நாடு முழுவதிலும் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இருப்பினும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மழை வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவுகளில் சிக்கியும் பலர் உயிரிழந்தனர். மழை ஓய்ந்ததும் கடுமையான வெயில் தாக்க துவங்கியது. இந்த மாறுபட்ட தட்டவெப்ப நிலையை தாக்குப்பிடிக்க முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். 

வெயிலுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பல பகுதிகளில் அரசு சார்பில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் எளிமையான ஆடைகளையே உடுத்த வேண்டும் எனவும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அநாவசியமாக வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தூய்மையான குடிநீரை அதிகளவில் உட்கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.  

அதிக பட்சமாக ஒடிசாவில் 117 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. சென்னையில் 109 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. ஆந்திரா, ஒடிசா ஆகிய மரிலங்களில் வெயிலின் தீவிரம் அதிகமாக காணப்படுவதுடன், அனல்காற்றும் வீசி வருகிறது. இதனால் அடுத்த வரும் நாட்களில் வெயிலை எப்படி சமாளிக்க போகிறோம் என மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பார்வையற்றோர்க்கான விசேட நூலகம் திறந்து வைப்பு-

uiuuuயாழ்ப்பாணம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் அனுசரணையில் யாழ். பொது நூலகத்தில் பார்வையற்றவர்களுக்கான விசேட நூலக அலகு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சம்பிரதாயபூர்வமாக பார்வையற்றவர்களுக்கான நூலகத்தை ஆரம்பித்து வைத்தனர். யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் அற்புதராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும் சிறப்பு விருந்தினராக யாழ் மாநகரசபை ஆணையாளர் பிரணவநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வித்யாவிற்காக தொடரும் போராட்டங்கள்-

vidyaயாழ் புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றைய தினமும் சில பகுதிகளில் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட மாணவியை நினைவுகூறும் வகையில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இன்று முற்பகல் மௌன அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, மூதூர் பாரதிபுரம் பெண்கள் அமைப்பினரும் பாடசாலை மாணவர்களும் இணைந்து வித்தியாவுக்காக இன்று பேரணியில் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் வித்தியாலய மாணவர்களும் இன்றுகாலை அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதேவேளை, மாணவியின் கொலையை கண்டித்து தோப்பூர் பகுதியிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சச்சிதானந்தம் கொல்லப்பட்டதை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம்-

gggசமூக சேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புப் தெரிவித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலுமுள்ள சமூகசேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூகசேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இந்த கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஆயுதகலாசாரத்தை ஒழியுங்கள், கொலையாளியை கண்டுபிடியுங்கள், அமைதியான சூழலை ஏற்படுத்துங்கள், விரைவாக தண்டனை வழங்குங்கள், அரச உத்தியோகத்தருக்கு பாதுகாப்பு தாருங்கள், நீதியினை நிலைநாட்டுங்கள் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களால்; கொலையாளியை விரைவாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த உதவுங்கள் என ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கும் மகஜர் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.கிரிதரனிடம் கையளிக்கப்பட்டது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி எம்.இளஞ்செழியன் நியமனம்-

ilanchliyanயாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக குற்றவியல் வழக்குகள் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு வழக்குகளுக்கான மாகாணம் மற்றும் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக எம்.இளஞ்செழியன் பிரதம நீதியரசர் கே.சிறிபவனால் நியமிக்கப்பட்டுள்ளார். யூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தி கொலைவழக்கில் முன்வைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட செம்மணி புதைகுழி வழக்கில் யாழ்ப்பாணத்தில் விசேட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு, 1999 இலிருந்து 2000 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் இவர் கடமையாற்றியிருந்தார். அதன் பின்னர் 3 வருடங்கள் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் 2008 ஆம் ஆண்டு வரையிலான கொடுமையான யுத்த காலத்தில் வவுனியா மாவட்ட நீதிபதியாகவும் இளஞ்செழியன் கடமையாற்றினார். அதனையடுத்து 2008 ஆம் ஆண்டு அவர் திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டார். Read more