வேள்ட் விசன் உதவியுடன் வலிமேற்கில் நூலகத் திறப்புவிழா-(படங்கள் இணைப்பு)

kkkவலி மேற்கு பிரதேசத்தில் வேள்ட் விசன் நிறுவனத்தின் உதவியுடன் 10 நூலகங்கள் திறக்கப்பட்டன. இதன்படி அண்மையில் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் இவ் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வின்போது சம்பத் வங்கியினர் குறித்த நூலக பயன்பாட்டிற்கு தளபாடங்களையும் வழங்கினர். இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது இன்று மாணவர்கள் மத்தியில் நூலகஙகளுக்கு சென்று வசிக்கும் நிலை குறைவடைந்து வருவது அவதானிக்க கூடியதாக உள்ளது இவ் நிலையில் ஒர் அதிகரித்த நிலையை உருவாக்கவே இவ்வாறான செயல் திட்டம் முன்வைக்கப்படுகின்றது. இதேவேளை மாணவர்களின் வாசிப்பு தன்மையை ஊக்குவிக்க வேண்டிய நிலையை உயர்த்துவதற்கு எல்லோரும் இணைந்து முயற்சிக்க வேண்டும்.

இன்றைய நவீன கற்றல் முறைகள் மற்றும் கற்பித்தல் முறைக்கு ஊடாக இவ் நூலகங்களின் பயன்பாட்டினை அதிகரிக்க நவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் இதேவேளை இவ் நூலகங்களுக்கு உள்ள வாசகர் வட்டத்தினை மேலும் விரிவடைச் செய்து அதன் வாயிலாக போட்டிகளை ஏற்படுத்தி மணவர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதறகு முயற்சிக்க வேண்டும். இவ் செயற்பாடுகள் தனித்த ஒருவரால் அன்றி ஒரு சமூகமாக இணைந்து மேற்கொள்வதற்கு தயாராக வேண்டும். இவ் நிலையிலேயே மாற்றஙகள் ஏற்படும். இந்நாட்டில இரு இனங்களுக்கிடையே நடந்த அழிவாயுத யுத்தம் நிறைவுக்கு வநததன் பின்னர் தற்போது அறிவாயுத யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இவ் யுத்தத்தில் நாம் வெற்றிபெற்றவர்களாக வேண்டுமாயின் எமது சிறார்களின் அறிவு நிலையினை உயர்த்தவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். சிறுவர்களைச் சுற்றி கல்விக்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஆரம்ப கல்வி மிக முக்கியமான நிலையில் உள்ளது இவ் நிலையில் மகிழ்வான ஒர் கல்விச் சூழல் பேணப்பட வேண்டும். என்று தெரிவித்துள்ளார். 

yuy dfdsss dddd ghg