பாகிஸ்தான் இராணுவத்தளபதி இலங்கைக்கு விஜயம்-

pakistan...பாகிஸ்தானிய இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கைக்கான விஜயம் செய்யவுள்ளார். இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல கிருஷாந்த டீ சில்வாவின் அழைப்பின் பேரிலேயே அவர் இங்கு வருகைதரவுள்ளார். 5 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு ராஜாங்க செயலாளர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, உட்பட பாதுகாப்பு தளபதிகளை சந்தித்து உரையாடுவார் என கூறப்படுகின்றது. இந்நிலையில், இராணுவ பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த ஜென்ரல் ரஹீல் ஷரீப்பின் தந்தையார் இரண்டாவது உலக மகா யுத்தத்தில் பங்கு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, அவரது சகோதரர்கள் இருவர் பல யுத்த முனைகளில் கடமையாற்றி பல விருதுகளை பெற்றவர்களாவர்.

கொக்காவில் பஸ் விபத்தில் நால்வர் பலி 35 பேர் படுகாயம்-

kokkavilகிளிநொச்சி பழைய முறிகண்டி கொக்காவில் – பனிக்கன்குள பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துளள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பழைய முறுகண்டி கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ஒன்றின்மீது மோதிய பஸ், கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 50வயதான ஜெகநாதன் உதயஜோதி மற்றும் 29வயதான தோமஸ் சாள்ஸ் நெரஞ்சன் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், 21பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது

மன்னார் விபத்தில் பெண் உயிரிழப்பு, மலையகத்தில் இரு விபத்துகள்-

mannar accidentமன்னாரில் நடைபெற்ற திருமண வைபவத்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த சிறிய ரக லொறி, மன்னார் பாலத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் பலியானதுடன் 8பேர் படுகாயமடைந்துள்ளனர் என மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மலையகத்தின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற பஸ் மற்றும் கெப் வாகன விபத்துகளில் 28பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற பஸ்ஸொன்று நேற்று இரவு, பெரகல, பிளக்புட் பகுதியில் வீதியை விட்டு கற்பாறையொன்றில் மோதியதில் 20பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, கதிர்காமத்திலிருந்து நுவரெலியா நோக்கிசென்ற கெப் வாகனமொன்று இன்று அதிகாலை வெலிமடை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8பேர் படுகாயமடைந்துள்ளனர் இவ்வாறு காயமடைந்தவர்களில் இரு குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு-

suicideவவு­னியா புதிய வேலர் சின்­னக்­கு­ளத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் சிறுமி ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது. வவு­னியா பன்­றிக்­கெய்தகுளம் பாட­சா­லையில் கல்வி கற்கும் 14 வய­து­டைய ஜெ. பவித்­திரா என்­ப­வரே அவ­ரது வீட்­டிற்குள் தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார். தாய் அண்­மையில் அரபு நாடொன்றில் இருந்து இலங்கை திரும்­பி­யி­ருந்த நிலையில் மீண்டும் அரபு நாட்­டிற்கு செல்ல பொலிஸ் நிலை­யத்தில் சான்­றி­த­ழொன்­றினை பெற சென்றிருந்த சம­யமே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளதென பிர­தேசவாசிகள் தெரிவிக்­கின்­றனர். இச்சம்­பவம் தொடர்­பாக ஓமந்தை பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டுள்ளனர்.

சீன கப்பல் விபத்துக்குள்ளானதில் 100ற்கும் அதிகமானவர்கள் மாயம்-

ffgfசீனாவில் 458 பேருடன் சென்று கொண்டிருந்த உல்லாசக் கப்பல் ஒன்று நேற்று இரவு யாண்ட்சே நதியில் மூழ்கியதையடுத்து, நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற இந்த கப்பல் சீன நகரான நஞ்சிங்கில் இருந்து சோங்குயிங்க்கு சென்று கொண்டிருந்தபோது கடும்புயலில் சிக்கி ஹ_பி பகுதியில் உள்ள யாண்ட்சே நதியில் மூழ்கியது. இந்த தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று ஆற்றில் தத்தளித்த 20 பேரை உயிருடன் மீட்டுள்ளனர், 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லையென சின்குவா என்ற சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேதனை மிகுந்த வித்தியாவின் கொடூரக் கொலையை வைத்து அரசியல் செய்வது மிகக் கேவலமானதாகும்-

67676வித்தியாவின் கொடூரமான படுகொலை ஒட்டுமொத்த மனித இனமே வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவம். இதில் மற்றவர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு, எங்களுக்கு சம்மந்தம் இல்லை என்று சொல்லிவிட்டு நாம் தப்பிக் முடியாது. இந்த ஈனச் செயலை செய்தது எம்மினத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை வெட்கத்துடன் ஓத்துக் கொள்ளவேண்டும். முன்பு இடம்பெற்ற இதே போன்ற பாலியல் பலாத்காரம், வன்புணர்வு மற்றும் படுகொலைகளில்; ஈடுபட்டவர்களுக்கு முறையான தண்டனை கிடைக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தில் குற்றஞ் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் முக்கிய பிரமுகர்கள் துணையுடன் கொழும்பிற்கு தப்பி ஓடிவிட்டார். எப்படியோ பொலிசார் அவரை கைது செய்துவிட்டார்கள். இவ்வாறான சம்பவங்களினால் ஆத்திரம் அடைந்த மக்கள், நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற எல்லை மீறிய ஆதங்கத்தின் வெளிப்பாடே நீதிமன்றத்தின் மீது நடந்த விரும்பத்தகாத சம்பவம். அதற்கு அரசியல் சாயம் பூசுவதோ, புலிச்சாயம் பூசுவதோ வெட்கக் கேடான விசயம்,

Read more