கப்பல் விபத்தில் பலியானவர்களில் 331 பேரின் சடலங்கள் மீட்பு-

china shipயாங்ஸி நதியில் மூழ்கிய சீனக்கப்பலில் பயணித்தவர்களுள் 331 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை குறித்த கப்பல் புயலில் சிக்கி யாங்ஸி நதியில் மூழ்கியது. இனிமேல் எவரையும் உயிருடன் மீட்பது சாத்தியமற்றது என மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர் குறித்த கப்பலில் பயணித்த 456 பேரில் 14 பேரே இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடரந்தும் காணாமற்போயுள்ளதாக கூறப்படுகின்றது.