குப்பிளான் தெற்கு ஞானகலா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி-(படங்கள் இணைப்பு)-

DSC_9855 (3)யாழ். குப்பிளான் தெற்கு ஞானகலா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2015 நிகழ்வு நேற்றுமாலை (06.06.2015) முன்பள்ளியின் தலைவர் திரு. சதீஸ்குமார் அவர்களது தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வில் ஏழாலை சிறீமுருகன் வித்தியாசாலையின் அதிபர் திரு. சந்திரகுமார், பனை, தென்னை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு. தவராசா, கிராம சேவையாளர் மயூரதன், சமூக ஆர்வலர் அபராசுதன் ஆகியோரும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்களல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றன. அவற்றில் முன்பள்ளிச் சிறார்களின் இசையும் அசைவும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இவ்விழாவில் பெருந்தொகையான ஊர்மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

DSC_9850 (2)DSC_9852 (2)DSC_9847 (2)DSC_0049DSC_9867 (2)DSC_0050DSC_0051DSC_0052DSC_0052DSC_0053 (2)