உடையார்கட்டு தமிழ் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்துவைப்பு (படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு, உடையார்கட்டு தமிழ் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று (19.06.2015) காலை 9.45மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. க.சிவநேசன்(பவன்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆய்வுகூடத்தினை திறந்து வைத்தார். பாடசாலையின் அதிபர் திரு. மகேந்திரராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், கோட்டக்கல்வி அதிகாரி, வலயக்கல்வி அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.