வட மாகண களப்புகளின் எல்லைகளை நிர்ணயிக்க நடவடிக்கை-

kalappuநந்திக்கடல் உள்ளிட்ட வட மாகணத்தின் பிரதானமாக காணப்படும் களப்புகளில் எல்லைகளை வரையறுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்புத் திணைக்களம் தெரிவிக்கின்றது. களப்புகளை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை களப்புகளை எல்லைப்படுத்துவதன் ஊடாக அதனை அண்மித்து வாழும் மீனவர்களின் பொருளாதார நிலை மேம்படுததோடு மீன்பிடியில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார். நாடாளாவிய ரீதியில் சுமார் 74 பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள களப்புகளை எல்லைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது. அந்த வகையில் கிழக்கின் மட்டக்களப்பு மற்றும் தம்பலகாமம் பகுதிகளில் உள்ள களப்புகளின் எல்லை நிர்ணயிக்கப்ட்டு உள்ளது. இந்த நடவடிக்கையானது நாடு பூராகவும் உள்ள அனைத்து களப்புகளிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரபாத் சந்திர கீர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிலாபத்தில் ஒருவர் கொலை, களனி சுற்றிவளைப்பில் பலர் கைது-

murderசிலாபம் மாதம்பே வீரக்கொடியான பிரதேசத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த கொலை சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கொலையுடன் தொடர்பு பட்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை களனி பொலிஸ் வலயத்தின் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 42பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 100 பொலிஸ் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதன்போது சட்டவிரோத சாராய உற்பத்தியாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார