கோண்டாவில் இராமகிருஸ்ண மகாவித்தியாலயத்தில் மது, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு-

25.06.2015 (1)யாழ். கோண்டாவில் இராமகிருஸ்ண மகாவித்தியாலயத்தில் மது, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்றுமுற்பகல் 11மணியளவில் இடம்பெற்றது. கோண்டாவில் சிறீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையம் ஊடாக சமூக ஆர்வலர் திரு. கெங்காதரன் அவர்களது ஏற்பாட்டில் மீசாலை தமிழ் மகாவித்தியாலய ஆசிரியர் திரு. சுரேஸ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வைத்தியக்கலாநிதி திரு. சிவரூபன், புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், கோண்டாவில் இராமகிருஸ்ண மகாவித்தியாலய அதிபர் திரு. ஆர்.சர்வேஸ்வரன், கோண்டாவில் இராமகிருஸ்ண மகாவித்தியாலய முன்னாள் அதிபர் சண் வாமதேவன் மற்றும் சிறீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையம் மற்றும் கோண்டாவில் இராமகிருஸ்ண மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஆகியன சார்பாக அதன் பொருளாளர் திரு. செ.செந்தூரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கோண்டாவில் இராமகிருஸ்ண மகாவித்தியாலயம், கோண்டாவில் இந்து மகாவித்தியாலயம், கோண்டாவில் பரஞ்சோதி மகாவித்தியாலயம், திருநெல்வேலி முத்துதம்பி மகாவித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றிருந்தனர்.

S S S 25.06.2015 (1)