Header image alt text

உடுவில் மல்லுவம் அண்ணா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுவிழா-2015

anna sanasamooka nilaiyam mallvam (2)யாழ். உடுவில் மல்லுவம் அண்ணா சனசமூக நிலையமும், கோண்டாவில் பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கமும் இணைந்து நடாத்திய அண்ணா முன்பள்ளிச் சிறார்களின் வருடாந்த விளையாட்டு விழா 2015 நேற்று முன்தினம் (27.06.2015) சனசமூக நிலையத்; தலைவர் திரு. த.தினேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ். இணுவில் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி ச.தேவகரன், பனை, தென்னைவள அபிவிருத்தக் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றதுடன், பரிசில்கள் வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

Read more

சுவிஸின் சூரிச் Unter Affoltern மண்டபத்தில் 26ஆவது வீரமக்கள் தினம்-

Untitled-1 (1)தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 05.07.2015 ஞாயிறன்று மதியம் 2.30க்கு சுவிஸ் சூரிச் மாநகரின் GZ Affoltern, Bodenacker 25,  Affoltern-Zürich என்னுமிடத்தில் புளொட்டின் 26ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளதென்பதை சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு இத்தால் அறியத் தருகின்றோம்

மேற்படி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்த அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு, மலரஞ்சலி, மௌனஅஞ்சலி என்பன இடம்பெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளின் வினோதவுடைப்போட்டி, நடன நாட்டியங்கள், நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

• அன்றையதினம் (05.07.2015) காலை 8.30க்கு தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான பரீட்சையும் நடைபெறவுள்ளது. இப் பரீட்சைக்கு இதுவரையில் தங்களைப் பதிவுசெய்யாத பிள்ளைகள் குறித்த நிகழ்வு இடம்பெறும் அன்றுகாலை 8.30க்கு நேரடியாகவே அங்கு வருகைதந்து தம்மைப் பதிவு செய்துவிட்டு மேற்படி பரீட்சையில் கலந்து கொள்ள முடியுமென்பதையும் அறியத் தருகின்றோம். அன்று பிற்பகல் 2.30க்கு நடைபெறவிருக்கும் வீரமக்கள் தின நிகழ்வின் போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

Read more

தேர்தலுக்காக 25,000ற்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்-

paffrelஎதிர்வரும் பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 25,000 இற்கும் அதிகமான கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கு தேர்தல்கள் கண்காணிப்பு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய 15,000 கண்காணிப்பாளர்களை தாம் நியமிக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராய்சி தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தினை முழுமையாக கண்காணிப்பது தபால் வாக்களிப்பு தொடர்பான கண்காணிப்பு தேர்தல் தினத்திற்கான கண்காணிப்பு மற்றும் நடமாடும் சேவைகளின் கண்காணிப்பு என நான்கு பிரிவின் ஊடாக தமது கண்காணிப்பாளர்கள் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை எதிர்வரும் தேர்தலின் நிமித்தம் 10,000 கண்கானிப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கபே அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். திறைமை வாய்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களை நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாள் ரசங்க ஹரிச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சின்னத்தை மாற்றுவதற்கு அனுமதி-

electionநடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகள் தமது சின்னங்களை மாற்றுவதாயின் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் அறிவிக்க வேண்டுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. 1981ஆம் நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 12.1ஆம் பிரிவுக்கமைய இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். மொஹமட் தெரிவித்தார். சின்னங்களை மாற்றுவது தொடர்பான குறித்த அறிவிப்புக்கள் கட்சியின் செயலாளர் ஊடாக எழுத்துமூலம் தேர்தல்கள் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுக்கள், ஏற்கெனவே கட்டுப்பணத்தை செலுத்த ஆரம்பித்துள்ளன. கட்டுப்பணத்தை அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை செலுத்தலாம். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சில தமது பெயர்களையும், செயலாளர்களையும் மாற்றியுள்ளன. தேர்தல் செயலாளர் அலுவலக தகவலின்படி, தேசப்பிரிய ஜாதிக்க பெரமுன என்ற பெயரில் இருந்த கட்சி சிறிலங்கா ஜாதிக்க பலய என பெயர்மாற்றம் செய்யபபட்டுள்ளது. அதன் செயலாளராக தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழுத்தலைவர் பியசிறி விஜயநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய இலங்கை மகா சபை கட்சி, பொதுஜன முன்னணியாக பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன். அதன் செயலாளராக பேராசிரியர் நாத் அமரகோன் செயற்படுகிறார். பொது பலசேனா இயக்கத்தின் அரசியல் முன்னணி, பொதுஜன முன்னணி கட்சியுடன் இணைந்து செயற்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 365167 பேர் வாக்களிக்க தகுதி-

election boxஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்க 3,65,167 பேர் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார். இதன்படி மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும் கல்குடா தொகுதியில் 1,05,056 பேரும் பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை இம் மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் 199 நிலையங்களும் கல்குடாவில்115 நிலையங்களும் பட்டிருப்பில் 100 நிலையங்களும் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலக நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.

சித்தன்கேணி வீதி திருத்தும் நடவடிக்கைகள்-

P1050755மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் இருந்த யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டு கிழக்கு சித்தன்கேணி துறட்டிப்பனை ஆலயத்திற்கு செல்லும் வீதிய திருத்துவது தொடர்பில் அண்மைக்காலத்தில் வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மேற்கொண்டு வந்த முயற்சியின் பயனாக தற்போது திருத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.