புலம்பெயர் உறவின் பிறந்த நாளில் முல்லைத்தீவு பெண்ணுக்கு உதவி-

photo 1புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த சங்கீதா தனது பிறந்த தினமான இன்று போரினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த முல்லைத்தீவைச் சேர்ந்த அருள்தாஸ் சிவரஞ்சினி அவர்களுக்கு உதவியுள்ளார். இதன்படி அவரின் வாழ்வாதாரத்திற்கான சுயதொழில் முயற்ச்சிக்காக சங்கீதா அவர்கள் சுமார் 30,000 ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளார். இவ் சமூக சிந்தனையுள்ள சங்கீதாவுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் இனிய பிறந்த hள் வாழ்த்துக்கள். இது போன்று எமது தாயக உறவுகளின் மூன்று வேளை உணவுக்கு வழி செய்வதற்கு உங்களது பிறந்த நாள் நிகழ்வுகள் போன்றவற்றின்போது இவ்வாறான உதவிகளை செய்ய முன்வாருங்கள் மனிதாபிமான உள்ளம் கொண்ட சங்கீதா போன்றவர்கள் சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். (வட்டு இந்து வாலிபர் முன்னணி)