மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகம் அவர்களுக்கு பிரிவுபசார விழா-(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு மாவட்ட முன்னால் அரசாங்க அதிபர் மதிப்பிற்குரிய திரு. வேதநாயகம் அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட இனிய வாழ்வு இல்லத்தில் இன்று பிரிவுபசார விழா இடம்பெற்றது. இதில் மாவட்ட பிரதம கணக்காளர், புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர், வட்டு இந்து வாலிபர் சங்க அங்கத்தவர்கள், பல நிறுவனங்களின் அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் போன்றோர் விருந்தினார்களாக கலந்துகொண்டு மாவட்ட அரசாங்க அதிபரினை கௌரவப்படுத்தினார் இந் நிகழ்வினை இனிய வாழ்வு இல்லத்தின் நிர்வாகம் தலைமை தாங்கி நடத்தியதுடன். இல்லத்தின் விசேட தேவைக்குரிய மாணவர்களின் கலை நிகழ்வுகளால் அரசாங்க அதிபர் மற்றும் சபையோரும் அவர்களின் திறமை கண்டு பெருமிதம் அடைந்தனர்.