Header image alt text

கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு

Tnaஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆசன பங்கீட்டு விபரம்

யாழ் மாவட்டம்: தமிழரசுக்கட்சி – 6 , ஈபிஆர்எல்எவ் – 2 , புளொட் 1 , ரெலோ 1

வன்னி மாவட்டம்: தமிழரசுக்கட்சி – 3 , ரெலோ 3 , ஈபிஆர்எல்எவ் – 2 , புளொட் – 1

மட்டக்களப்பு மாவட்டம்:  தமிழரசுக்கட்சி –5,  ஈபிஆர்எல்எவ் – 1,  புளொட் 1,  ரெலோ 1

திருகோணமலை மாவட்டம்: தமிழரசுக் கட்சி – 4 ஈபிஆர்எல்எவ் – 1 ரெலொ- 1  புளொட்-1

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தியா?

t_n_aஇலங்கையின் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் தொகுதிப் பங்கீடு, தமிழரசுக் கட்சி தவிர்த்த பிற கட்சிகளால் சுமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
தொகுதிப் பங்கீட்டில் திருப்தி இல்லையென்றாலும் ஒற்றுமைக்காக இதனை ஏற்றுக்கொண்டிருப்பதாக கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்த முடிவுகள் ஒரு கட்சியின் நலன்களைக் கருத்திற்கொண்டு மேற்கொண்டதாகத் தெரிவதாகவும், ஒற்றுமையைக் கருத்திற்கொண்டும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டும் இந்த முடிவுகளை தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளின் தலைவர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர். Read more

முன்னாள் போராளிகள் போட்டியிடுவது உரிய பலனைத்தராது – சந்திரகாந்தன்
 
pillayanவிடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எண்ணியுள்ளது தமிழ் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூறுகிறார்.
 
அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்று அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். Read more