Header image alt text

அனைத்து இடங்களிலும் நாம் வெற்றிபெறுவோம்-மாவை சேனாதிராஜா-(படங்கள் இணைப்பு)

P1060719யாழ் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மதியாபரணம் சுமந்திரன் ஆகியோர் இன்றுபிற்கல் 2.45மணியளவில் யாழ். கச்சேரியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுத் தாக்கலின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா அவர்கள், மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள். எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கின்றது. நாங்கள் அனைத்து இடங்களிலும் வெற்றிபெறவோம் என்றார். யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மதியாபரணம் சுமந்திரன், என்.சிறீகாந்தா, ஈஸ்வரபாதம் சரவணபவன், சிவஞானம் சிறீதரன், அருந்தவபாலன், மதினி நெல்சன் (பருத்தித்துறை, பிரதேசசபை அங்கத்தவர்), ந.அனந்தராஜ் (முன்னாள் தலைவர், வல்வெட்டித்துறை நகரசபை) ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read more

ஐந்து மாவட்டங்களிலும் த.தே.கூ வேட்புமனு தாக்கல்-

rrtyவடக்கு, கிழக்கிலுள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. இதன்படி வடக்கு கிழக்கு தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் அடங்கிய வேட்புமனுக்களானது அந்தந்த மாவட்டச் செயலகங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்திலும், வன்னித் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்திலும், திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்திலும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் பொன்.செல்வராஜா தலைமையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திலும், அம்பாறை தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு ரெலோவின் பொதுச் செயலாளர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் அம்பாறை மாவட்டச் செயலகத்திலும் பிற்பகல் 2.45 மணிக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ், வன்னி, மட்டு மாவட்ட வேட்பாளர்கள்-

tna (4)யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியில் மாவை சேனாதிராஜா தலைமையில் சிவஞானம் சிறீதரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், அருந்தவபாலன், மதினி நெல்சன் ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ந.அனந்தராஜ் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ரெலோ சார்பில் என். சிறீகாந்தா ஆகியோர் களமிறங்கியுள்ளனர். வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் சாள்ஸ் இருதயநாதன் (இவர் கடந்த மாகாணசபைத் தேர்தலில் புளொட் சார்பில் போட்டியிட்டவர்), றோய் ஜெயக்குமார், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர் டொக்டர் சிவமோகன் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் தலைவர் அடைக்கலநாதன் வினோநோகராதலிங்கம் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமாள் பழனியாண்டி(செல்லத்துரை) ஆகியோரும், புளொட் சார்பில் வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவனேசன் அவர்களும் களமிறங்கியுள்ளனர். மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் பொன். செல்வராஜா, பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், ஜீ.சௌந்தரராஜன், சிறிநேசன், ரெலோ சார்பில் கோ. கருணாகரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் இரா.துரைரெட்ணம், புளொட் சார்பில் சதாசிவம் வியாளேந்திரன் (அமல்மாஸ்டர்) ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.