தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ், வன்னி, மட்டு மாவட்ட வேட்பாளர்கள்-

tna (4)யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியில் மாவை சேனாதிராஜா தலைமையில் சிவஞானம் சிறீதரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், அருந்தவபாலன், மதினி நெல்சன் ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ந.அனந்தராஜ் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ரெலோ சார்பில் என். சிறீகாந்தா ஆகியோர் களமிறங்கியுள்ளனர். வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் சாள்ஸ் இருதயநாதன் (இவர் கடந்த மாகாணசபைத் தேர்தலில் புளொட் சார்பில் போட்டியிட்டவர்), றோய் ஜெயக்குமார், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர் டொக்டர் சிவமோகன் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் தலைவர் அடைக்கலநாதன் வினோநோகராதலிங்கம் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமாள் பழனியாண்டி(செல்லத்துரை) ஆகியோரும், புளொட் சார்பில் வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவனேசன் அவர்களும் களமிறங்கியுள்ளனர். மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் பொன். செல்வராஜா, பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், ஜீ.சௌந்தரராஜன், சிறிநேசன், ரெலோ சார்பில் கோ. கருணாகரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் இரா.துரைரெட்ணம், புளொட் சார்பில் சதாசிவம் வியாளேந்திரன் (அமல்மாஸ்டர்) ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.