மலேசியாவில் நினைவுகூரப்பட்ட 26ஆவது வீரமக்கள் தினம்-(படங்கள் இணைப்பு)
புளொட்டின் 26ஆவது வீரமக்கள் தினம் மலேசியா டமாங்கிறா டமாய் என்னும் பகுதியில் இன்றையதினம் நினைவுகூரப்பட்டது. கழகத் தோழர்களான சிவபாலன் மற்றும் ரியாந்தன் ஆகியோரது தலைமையில் இந்நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன. இதன்போது வீரமக்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்ட மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன. இந்நினைவுதின நிகழ்வில் கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.