போரினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்விக்கு உதவி-(படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம் வலி தென்மேற்கில் போரினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்விக்கான வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் உதவித்திட்டத்தின்கீழ் ஏற்கனவே உள்ள 60 பிள்ளைகளுடன் நேற்றையதினம் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் வலி தென் மேற்கு பிரதேச செயலக பிரவுக்குட்பட்ட சுமார் 20 பிள்ளைகளின் வங்கிக்கணக்கில் தலா 1000 ரூபா வைப்பிலிடப்பட்டது. இதன்படி அவர்களுக்கு மாதாந்தம் 1000 ரூபா கல்விக்கான கொடுப்பனவு செயற்திட்டத்தினை வட்டு இந்து வாலிபர் சங்கத் தலைமைக் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி அனுசரனையை இ.சரவணபவன் அவர்கள் வழங்கியுள்ளார்.