Header image alt text

சுன்னாகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு-(படங்கள் இணைப்பு)

DSC01889தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் நேற்று (19.07.2015) யாழ். சுன்னாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதற்கான கூட்டம் வலிதெற்கு கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் திரு. குமாரவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. கௌரிகாந்தன், வலிமேற்கு சமூக மேம்பாட்டு இணைய ஆலோசகர் திரு. டேவிட், முன்னாள் கிராம சேவையாளர் திரு. பரமநாதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் ஊர்ப் பெரியோர்களும், சமூக ஆர்வலர்களும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

இங்கு உரையாற்றிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையின் பலத்தைக் காட்ட வேண்டிய ஒரு தருணம் மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது. எனவே நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்வரும் தேர்தலிலே 20ற்கும் மேற்பட் ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்று ஒரு பலம்மிக்க சக்தியாக நிற்பதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இதன்மூலமே வருகின்ற அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தினை தட்டிக்கழிக்க முடியாத நிலைமை ஏற்படும்.

Read more

யுத்த காலத்தில் மக்கள் இடம்பெயராத வகையில் வவுனியாவை பாதுகாத்தோம்- வேட்பாளர் க.சிவநேசன் (பவன்)-

newssssssதமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டிருப்பதன் மூலமே அங்கத்துவ கட்சிகள் புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக செயற்பட முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வன்னித் மாவட்டதில் போட்டியிடும் புளொட் அமைப்பின் வேட்பாளர் திரு கந்தையா சிவநேசன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள அறிவொளி அகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துக் கூறுகையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் இயக்கம் வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுகின்றது. வன்னி மாவட்டம் எல்லைப் பிரதேசமாக இருந்ததால் இங்கு பல அபிவிருத்தி திட்டங்களை நாம் செய்திருக்கிறோம். யுத்த காலத்தில் இப் பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயராத வகையில் தமிழ் பிரதேசமாக வவுனியாவை நாமே பாதுகாத்துள்ளோம். இங்குள்ள பல அபிவிருத்திகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். Read more

வலது குறைந்த வாக்காளர்களுக்கான அறிவுறுத்தல்-

electionவலது குறைந்தவர்கள் வாக்களிக்கச் செல்வதில் சிரமங்களை எதிர்நோக்கினால் வசதிகளைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதற்கென ஓகஸ்ட் 9ம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும். வலது குறைந்தவர்கள் வாக்களிக்கச் செல்லவென வாகன வசதி கோரி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட வைத்தியரிடம் பெறப்பட்ட சான்றுடன் தேர்தல்கள் செயலகம் விடுத்துள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி கையளிக்க முடியும் என செயலகம் குறிப்பிட்டுள்ளது. தெரிவத்தாட்சி அதிகாரியின் தீர்மானத்தின்படி வலது குறைந்தவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

160 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியில்-

electionஎதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான கண்காணிப்பு பணிகளுக்காக 160 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் அதிகளவானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கண்காணிப்பாளர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுமார் 70 கண்காணிப்பாளர்கள் இவ்வாறு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்தக் குழுவின் ஓரு தொகுதியினர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் கண்காணிப்பு காரியாயலம் ஒன்றையும் அமைக்கவுள்ளது. இதற்கு மேலதிகமாக தேர்தல் கண்காணிப்பு மற்றும் தெளிவூட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ள மூன்று உள்ளுர் நிறுவனங்களுக்கு 1.2 மில்லியன் யூரோக்களை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது.

வலி மேற்கிற்கு 80லட்சம் பெறுமதியான பெக்கோ வாகனம் கையளிப்பு-

P1060357யாழ். வலி மேற்கு பிரதேச சபைக்கு ஏறத்தாழ 80 இலட்சம் ரூபா பெறுமதியான பெக்கோ வாகனம் கொழும்பில் வைத்து வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சனி ஐங்கரன் அவர்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது. சிறிது காலத்திற்கு முன்னதாக வலி மேற்கு பிரதேச சபைக்கு 8000 லீட்டர் கொள்ளளவுடைய நீர்த்தாங்கி மற்றும் ரோலர் வாகனங்களும் வலி மேற்;கு பிரதேச சபை தவிசாளிடம் கையளிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.

தமிழகத்தில் வீரமக்கள் தின சுவரொட்டிகள்-(படங்கள் இணைப்பு)

received_1609877265959929கடந்த 16.07.2015 அன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால் (புளொட்) அனுஷ்டிக்கப்படும் 26வது வீரமக்கள் தினத்தினை முன்னிட்டு, இந்தியாவின் தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் அகதி முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் குறிப்பாக மதுரை, சென்னை, சேலம், இராமநாதபுரம் ஆகிய பிரதேசங்களில் “வீரமக்கள் தின” சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டதுடன், “வீரமக்கள் தின” துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

Read more

நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் வெற்றியே முக்கியம்-ஆ.யதீந்திரா-

jathiஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்டு வெல்வதல்ல முக்கியம், நாம் பிரதிநித்துவப்படுத்தும் மக்களின் வெற்றியே முக்கியமென திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அரசியல் ஆய்வாளரும் இளம் வேட்பாளருமான ஆ.யதீந்திரா தெரிவித்துள்ளார். திருமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்ற நிலையில், நேற்றையதினம் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டமொன்று திருமலையிலுள்ள சில்வெஸ்டர் உல்லாச விடுதியில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருமலையில் இம்முறை இரு ஆசனங்களை வெற்றிகொள்ள வேண்டுமென்னும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோரிக்கை தொடர்பில் பேசியபோதே யதீந்திரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read more

கிளிநொச்சி சிறுமி யர்ஷிகா சடலமாக மீட்பு-

deadbody-1கடந்த ஜூன் 21ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமியின் சடலம், குறித்த சிறுமி காணாமல்போன இடத்திலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பொறிக்கடவை வயல்வெளியிலிருந்து நேற்று மீட்கப்பட்டது. குறித்த வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தது எனவும் அச்சிறுமி காணாமல் போனபோது அணிந்திருந்த ஆடை, அலிஸ்பாண்ட் மற்றும் செருப்பு ஆகியனவும் அச்சிறுமி புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் கூறினர். மேற்படி சிறுமியின் சடலம் குறித்த பகுதியில் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்ததகவலின் அடிப்படையில், அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், அச்சடலம் சிறுமி யர்ஷிகாவினுடையது என அவர் அணிந்திருந்த ஆடைகள் மூலம் அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். மேற்படி கிராமத்திலுள்ளவர்கள் 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வாய்க்கால் ஒன்றில் குளிப்பதற்காக தினமும் சென்றுவருபவர்கள். Read more

யுத்தத்தால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர்க்கு உதவி-

P1060818யாழ். வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் மேற்கொள்ளப்படும் தாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் செயற்திட்டத்தின் கீழான நடவடிக்கைகளில் ஒன்றான, வட்டுக்கோட்;டை இந்து வாலிபர் சங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க யுத்தத்தால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர உதவி தொடர்பில் புலம்பெயர் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகைப் பணம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரிடம் வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் அவ் அமைப்பினரிடம் கடந்த 16.07.2015 அன்று ஒப்படைக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் குறிப்பிடுகையில்,

Read more