யுத்தத்தால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர்க்கு உதவி-

P1060818யாழ். வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் மேற்கொள்ளப்படும் தாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் செயற்திட்டத்தின் கீழான நடவடிக்கைகளில் ஒன்றான, வட்டுக்கோட்;டை இந்து வாலிபர் சங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க யுத்தத்தால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர உதவி தொடர்பில் புலம்பெயர் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகைப் பணம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரிடம் வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் அவ் அமைப்பினரிடம் கடந்த 16.07.2015 அன்று ஒப்படைக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் குறிப்பிடுகையில்,

மேற்படி யுத்தத்தால் முள்ளம் தண்டுவடம் பாதிக்கப்பட்டோரிற்கான அவசர உதவி தொடர்பில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் கோரிக்கையை தமிழ் அலை ஊடாக நான் தெரிவித்தபோது உதவும் மனப்பான்மை கொண்ட அன்பு உள்ளங்கள் இருவர் அனுப்பிய ஒரு தொகைப்பணம் இன்று இங்கு ஒப்படைக்கப்பட்டு வழங்கப்பட்டவர்களின் பெயரில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரின் பற்றுச் சீட்டு வழங்கப்படுகின்றது. இவ் பற்றுச் சீட்டுக்கள் உரியவர்கட்கும் வானொலியினருக்கும் அனுப்பி வைக்கப்படும். மேற்குறித்த பாதிப்புக்கு உட்பட்டோர் தொடர்பில் இவர்கள் வவுனியா மாவட்டத்தில் வைரவப் புளியங்குளம் பகுதியில் உயிரிழை எனும் குறித்த யுத்தத்தால் பாதிகப்பட்டவர்களுக்கான இணையம் அமைந்துள்ளது. இவ் அமைப்பின் ஊடாகவே மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் உள்ளோருக்கான உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேற்குறித்த தாக்கத்தில் உள்ள பாதிக்கப்பட்டோர் குறித்த மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தாக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் மருத்துவ தகவல்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. இவ்வாறான பாதிப்புக்கு உட்பட்டோர் எண்ணிக்கை தற்போது கிடைக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் 166 ஆகும். இவர்கள் தொடர்பிலான தங்களல் கோரப்பட்மைக்கு அமைவாக தனித்தனியாக விபரங்களை உடனடியாக வழங்கமுடியாத நிலையில் உள்ள நிலையில் தங்களால் அனுப்பப்படும் உதவிகள் குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்டட விபரம், ஆதாரம் மற்றும் புகைப்படங்கள் தங்களுக்கு விபரமாக அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு பாதிக்கப்பட்டோரில் 55 பேர் தற்போது படுக்கைப் புண் நிலைக்கு உள்ளாதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன எனக் குறிப்பிட்டார்.