Header image alt text

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 435 முறைப்பாடுகள்-

election violenceபொதுத் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 435 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. சட்டவிரோத நியமனங்கள் மற்றும் பதவியுயர்வு தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பிரிவு குறிப்பிட்டது. சட்டவிரோத நியமனங்கள் மற்றும் பதவியுயர்வு தொடர்பில் 133 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் பிரசார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய, போஸ்டர் மற்றும் கட்டவுட் ஆகியவற்றை காட்சிப்படுத்தியமை தொடர்பில் 81 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தேசிய ஒற்றுமையை பாதுகாக்க ஆணை வழங்குங்கள்-பிரதமர் ரணில்-

ranil01தேசிய ஒற்றுமையை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகாரத்தை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். நல்லாட்சியின் கீழ் அனைத்து இன மக்களும் இன்று ஒத்துழைப்புடன் வாழ்வதாக பிரதமர் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். எனவே, எதிர்வரும் 17ஆம் திகதி ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு பெரும்பான்மை விருப்பு வாக்கை பெற்றுக்கொடுத்து ஆணையை வழங்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்தார். எந்தவொரு நபரும் தமது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மேர்வின் சில்வா, ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைவு-

mervinமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஐக்கிய தேசிய முன்னணியுடன் நேற்று இணைந்து கொண்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் களணி தொகுதி அமைப்பாளரான மேர்வின் சில்வா, நல்லாட்சியின் பொருட்டு தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக குறிப்பிட்டார். கிரிபத்கொட சுதர்ஷணராம விஹாரையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் அவர் இவ்வாறு இணைந்து கொண்டார். இந்நிகழ்வில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பெவன் பெரேராவும் கலந்து கொண்டிருந்தனர். இங்கு கருத்துரைத்த மேர்வின் சில்வா, நல்லாட்சியின் பொருட்டு தாம் ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக கூறினார்.

அவிசாவளை விபத்தில் 50ற்கும் மேற்பட்டோர் காயம்-

accidentகொழும்பு, அவிசாவளை – கொஸ்கம, சாலாவ பகுதியில் தனியார் பஸ்சொன்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்ஸ_ம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 50ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். எம்பிலிபிட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸ_ம் கொழும்பிலிருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸ_ம் நேருக்கு நேர் மோதியுள்ளன. இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தோர் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனையோர் கொஸ்கம அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் பட்டியலில் இலங்கைக்கு 2ஆம் இடம்-

swissசுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 06 மாத காலங்களில் 11,000 பேருக்கும் அதிகமானோர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். அதே காலத்தில் சுமார் 840 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 06 மாத காலத்திற்குள் எரித்திரியாவிலிருந்தே அதிகளவான அதாவது 3800 புகலிடம் கோரிய விண்ணப்பங்கள் கிடைத்திருக்கின்றன. இந்நிலையில் கடந்த 06 மாத காலத்தில் இலங்கையிலிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டையும் விட 76.5 வீதமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி மேற்கு தவிசாளர் அன்னை சாரதாதேவி பாடசாலைக்கு விஜயம்-(படங்கள் இணைப்பு)

P1060943யாழ். வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கிளிநொச்சி அன்னை சாரதாதேவி பாடசாலைக்கு ஆடிப் பிறப்பன்று விஜயம் செய்தார். இதன்போது வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளரால் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தாயக உறவுகளை தலைநிமிரச் செயவோம் என்ற செயல் திட்டத்தின்கீழ் பிரிட்டன் வாழ் தமிழ் உறவான வைத்திய கலாநிதி சங்கர் அவர்களால் தனது மாமியாரின் பிறந்த நாள் நினைவின் பொருட்டு அனுப்பிவைக்கப்பட்ட ரூபா 15000-த்தினை குறித்த பாடசாலையிடம் ஒப்படைத்த வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் குறித்த பாடசாலை மாணவர்கட்கு அன்றைய தினம் ஆடிக்கூழ் மற்றும் கொழுக்கட்டைகளை வழங்கி குறித்த மாணவர்களுடன் இணைந்து தானும் உண்டு மகிழ்ந்தார்.

Read more

கைதடி பகுதியில் தேர்தல் பிரசார கருத்தரங்கு-(படங்கள் இணைப்பு)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் 20.07.2015 அன்று யாழ் கைதடிப் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அவருடன் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் தேர்தல் பிரசாரப் பணிகளில் இணைந்திருந்தார். 

DSC_0295

Read more