Posted by plotenewseditor on 28 July 2015
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 28 July 2015
Posted in செய்திகள்
ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட ஐவர் கட்சியிலிருந்து நீக்கம்-
நல்லாட்சிக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நடவடிக்கையை எடுத்துள்ளார். அதன்படி, இம்முறை தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடும் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, எஸ்.பி.நாவின்ன, எம்.கெ.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உரியவர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில கூறப்பட்டுள்ளது. கட்சியின் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டதால் கட்சி யாப்பின் பிரகாரம் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரதமர் கைச்சாத்து-
பொது மற்றும் அரசியல் அமைப்புகள் 110 இணைந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இன்று முற்பகல் இலங்கை மன்றக்கல்லூரில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, மாதுலுவாவே சோபித்த தேரரும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்வின்போது ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகளில் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Posted by plotenewseditor on 28 July 2015
Posted in செய்திகள்
வட மாகாணத்தின் சிறந்த கைப்பணி உற்பத்தி திறன் போட்டியின் முடிவுகள்.!(படங்கள் இணைப்பு)
கடந்த மாதம் நியுகிலியஸ் நிறுவனத்தின் அனுசரணையில் கொழும்பில், பனை அபிவிருத்திச் சபையினால் கைப்பணிப் பயிற்சி பெற்றுவரும் பயிற்சியாளர்களுக்கு நடைபெற்ற போட்டியில், வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த பெண்கள் முதல் மூன்று இடங்களை தட்டிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. போட்டியில் சிறந்த உற்பத்தியினை வழங்கி முதல் இடத்தை கெக்டர் ஜோ.எமில் திரேசா அவர்களும், இரண்டாம் இடத்தை திருமதி யுவச்சந்திரகுமார் லூசியா அவர்களும், மூன்றாம் இடத்தினை திருமதி விக்னேஸ்வரன் உஷாநந்தினி அவர்களும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களை வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும், தற்போதைய வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன்(விசு), வட மாகாண சபை உறுப்பினரும், பாராளுமன்ற தேர்தலின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளருமான திரு கந்தையா சிவநேசன்(பவன்), வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் இவர்களுக்கான பயிற்சிகளை வழங்கிய ஆசிரியைக்கு தமது நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்தார்கள். மேலும் சிறந்த பல உற்பத்தியினை வழங்கி எமது சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.
Posted by plotenewseditor on 28 July 2015
Posted in செய்திகள்
சுழிபுரம், தொல்புரம் சர்வோதயத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)
யாழ். சுழிபுரம் தொல்புரம் சர்வோதயத்தில் ஆடிப் பிறப்பு நிகழ்வு சட்டத்தரனி செல்வி.சாருஜா.சிவநேசன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் கல்வியில் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் பா.தணபாலன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது இன்று இவ் நிகழ்வில் கலந்து கொள்வதனை இட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இவ் நிகழ்வின் வாயிலாக கடந்த கால எமது இனத்தின் பண்பாடுகள் பாரமபரியங்கள் இவ் இடத்தில் நிலை பெறுவதனை இட்டு மகிழ்ச்சியாகவே உள்ளது. கடந்த கால யுத்தம் அதன் பின்னரான கலப்பகுதியின் செயற்பாடுகள் மற்றும் புலம் பெயர்;வுகள் போன்ற பல நிகழ்வுகள் எமது பண்பாட்டின் பல பகுதிகளையும் சிதைவடைய வைத்துள்ளது. இவை மீண்டும் இவ்வாறான நிகழ்வுகள் வாயிலாக கட்டி வளர்க்கப்படவேண்டும்
Posted by plotenewseditor on 28 July 2015
Posted in செய்திகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் என்.சிறீகாந்தா ஆகியோர் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது….(படங்கள் இணைப்பு)