Header image alt text

கடும் போக்காளர்களுக்காக எமது நியாயமான கோரிக்கையை விட்டுக்கொடுக்க முடியாது-புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்-(நேர்காணல் ஆர்.ராம்)

Annar kb (18)தென்னிலங்கையில் உள்ள கடும்போக்காளர்களுக்காக அரசியல் தீர்வு விடயத்தில் நாம் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கையை விட்டுக்கொடுக்க முடியாது என புளொட் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். 

கேள்வி:- தற்போது பல அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் களமிறங்கியுள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்கு யாழ் தேர்தல் களம் சவாலானதான மாறியுள்ளதா?

பதில்:- தென்னிலங்கையைச் சேர்ந்த பெயர் ஊர் தெரியாதவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியத்தை கையில் எடுத்துக் கொண்டு இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். குறிப்பிட்ட கட்சிகள், சுயேட்சைகள் மட்டும் களத்தில் இருந்தால் அவை தொடர்பில் மக்களுக்கு தெளிவுநிலையொன்று இருக்கும். ஆனால் தற்போதைய நிலைமையால் மக்கள் தவறுதலாக மாறிமாறி வாக்களிக்கும் சூழலொன்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
தென்னிலங்கையிலிருந்து வருகை தந்துள்ள கட்சிகளில் போட்டியிடுபவர்கள் அக்கட்சிகளின் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களையே மக்கள் மத்தியில் தெரிவித்து வருகின்றனர். உண்மையிலேயே இவர்கள் வெற்றி பெற்றால் அக்கட்சிகளின் நலன்கள் சார்ந்தே செயற்பாடுவார்களே தவிர தமிழ் மக்களின் உரிமைகளை, தேவைகளை முன்வைத்து செயற்படமாட்டார்கள்.

Read more

தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் 663 முறைப்பாடுகள் பதிவு-

complaintதேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் இதுவரை 663 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக நியமனங்கள் மற்றும் பதவியுயர்வு வழங்கப்பட்டமை தொடர்பில் அதிகப்படியாக 154 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் செயலகத்திற்கு 148 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறித்து 95 முறைப்பாடுகளும் அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டமை குறித்து 55 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

தமிழகத்திலிருந்து 45 அகதிகள் நாடு திரும்பல்-

refugee45 பேரைக் கொண்ட மற்றுமொறு தொகுதி இலங்கை அகதிகள் நேற்று நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் திருச்சி, திண்டுகல், கன்யாகுமாரி, விழுப்புரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை, கரூர், திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களிலுள்ள அகதி முகாம்களில் தங்கியிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் இவ்வாறு 41 இலங்கையர்கள் தாயகம் திருப்பியதாகவும், இறுதியாக கடந்த மாதம் 46 அகதிகள் நாடு திருப்பியதாகவும் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீளவும் தாயகம் அனுப்புவதற்கு இரு நாட்டு உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணப் பையில் சடலம் கண்டுபிடிப்பு-

deadகொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை அநுராதபுரம் பஸ் தரிப்பு இடத்தில் பயணப் பை ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ் தரிப்பு நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பயணப்பை ஒன்றை திறந்து பார்த்த வியாபாரி ஒருவர் அதில் சடலம் இருப்பதைக் கண்டதும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

காணாமற்போனதாக கூறப்பட்ட தம்­பி­ரா­ஜாவின் மகன் கைது-

 thampi sonயாழில் கடந்த 23ம் திகதிமுதல் காணாமல் போன­தாக கூறப்­பட்ட மு.தம்­பி­ரா­ஜாவின் 19வய­தான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா வெள்­ள­வத்­தையில் வைத்து நேற்று பொலிஸாரால் கைதுசெய்­யப்­பட்­டுள்ளார். யாழிலிருந்து கொழும்­புக்கு வந்த விஷேட பொலிஸ் குழு, வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஆகி­யோ­ரு­ட­னான குழு­வுடன் இணைந்து அவரை கைது செய்­த­தா­கவும், நேற்றிரவு விசா­ர­ணைகள் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். திரு­வ­ளவன் தம்­பி­ராஜா அவ­ரது சுயவிருப்பின் பேரில் யாழிலிருந்து கொழும்­புக்கு பஸ்சில் வந்­துள்­ளமை ஆரம்­ப விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் அத­னூ­டாக அவர் கடத்­தப்­ப­ட­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யுள்­ள­தா­கவும் யாழ்.பொலிஸ் பொறுப்­ப­தி­காரி கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.