Header image alt text

எதிர்க்கட்சித் தலைவர் தெரிவில் தலையிடப் போவதில்லை-ஜனாதிபதி-

maithripala3நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிந்தெடுக்கும் விடயத்தில் தான் தலையிடப் போவதில்லை எனவும் அது நாடாளுமன்றத்துக்கு உரித்தான விடயமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி இலங்கை வருகை-

afkhanஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்சாயி இலங்கை வந்துள்ளார். புதுடில்லியில் இருந்து இன்று மாலை 3.25க்கு வந்த இந்திய விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் விசேட உரையாற்றவென அவர் இலங்கை வந்துள்ளார். ஹமிட் கர்சாயியுடன் மேலும் 7 இராஜதந்திரிகளும் இலங்கை வந்துள்ளதாகவும் அவர்கள் 2ம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பர் என்றும் கூறப்படுகிறது.

ததேகூ இணைப்புக் குழுவைக் கூட்டுமாறு தமிழரசுக் கட்சிக்கு அழுத்தம்

U&Sதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கொழும்பில் நேற்று கூடிய அந்த அமைப்பைச் சேர்ந்த மூன்று கட்சிகள் தமிழரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேசிய பட்டியல் இடங்களுக்கான ஆட்களை நியமிப்பதில் எற்பட்டிருந்த அதிருப்தி நிலைமையை அடுத்து, தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய 3 கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கொழும்பில் இன்று கூடி இரண்டாவது கட்டமாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் இவர்கள் கூடி தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகள் குறித்து ஆராய்ந்திருந்தார்கள். Read more

 கூட்டமைப்பு தலைவர்களுடன் கலந்துரையாட ஜனாதிபதி அழைப்பு

UNP PAஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்புக்கு கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவங்க குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்கட்சித் தலைவரை நியமிக்க ஜனாதிபதி இணக்கம் -விமல் வீரவன்ச

vimalஎதிர்கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்கட்சித் தலைவரை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இன்று (31) காலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டுக் கட்சித் தலைவர்கள் சந்திப்பின்போது ஜனாதிபதி தமது கோரிக்கைக்கு அனுமதி அளித்ததாக அவர் கூறியுள்ளார்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்டதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஏற்படும் இழப்பு தொடர்பிலும் இங்கு ஜனாதிபதிக்கு விசேடமாக எடுத்துக்கூறியதாக விமல் தெரிவித்துள்ளார்.

08ஆவது பாராளுமன்றம் நாளை கூடுகிறது உறுப்பினர்கள் விரும்பிய ஆசனத்தில் அமரலாம்
 
parliamentஇலங்கையின் 08ஆவது பாராளுமன்றம் நாளை கூடும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் டபிள்யு.பி.டி. தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் தெரிவுக்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன வரிசைகள் நிரந்தரமாக உறுதி செய்யப்படுமென்றும் அவர் கூறினார். Read more

சர்வதேச விசாரணை கோரி காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

mannar missing peopleஇலங்கையில் போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் மன்னார் நகரில் ஞாயிறன்று கூடி தங்களின் உறவுகளை கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருக்கின்றனர்.

ஆட்கள் காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரரன சர்வதேச தினத்தை ஒட்டி இந்த நிகழ்வு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட் தந்தை ஜெபமாலையின் தலைமையில் நடைபெற்றது. Read more

சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் -பிரதமர் ரணில்

ranil wickramaமனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையின் அரசியல் சட்டத்துக்குள்பட்ட வகையில் உள்நாட்டிலேயே விசாரணைகள் நடத்தப்படும். அது இலங்கையில் உள்ள அனைத்துச் சமூகங்களும் சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more

தமிழ் தேசிய கூடமைப்பின் அங்கத்துவ கட்சிகளின், இன்றைய சந்திப்பில் நடந்தது என்ன?  – 30.08.2015 ஊடக அறிக்கை

tna (4)தமிழ் தேசிய கூடமைப்பின் அங்கத்துவ கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபி .ஆர் .எல் .எப்) ஆகியவற்றின் உயர் மட்ட உறுப்பினர்கள் கொழும்பில் 2015 ஆகஸ்ட் 30ம் திகதி (இன்றைய தினம்) கூடி தேர்தலுக்குப் பின்னரான கள நிலவரங்கள் தொடர்பாகவும், அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர். Read more

 தாயக உறவுகளைத் தலை நிமிரச் செய்வோம் -உதவி 8

வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களால் பிரான்ஸ் தழிழ் ஒலி வானொலிக்கூடாக புலம் பெயர் உறவுகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தாயக உறவுகளைத் தலை நிமிரச் செய்வோம் என்ற உதவித்திட்டடத்தின் 8வது உதவித்திட்டம் சுவிஸ்லாந்து நாட்டில் இருந்து வழங்கப்பட்ட உதவியின் வாயிலாக அண்மையில் அராலி ஊரத்தி பகுதியில் 21 பாடசாலை மாணவர்கட்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. Read more

திட்டமிட்ட வகையில் மாணவர் சமூகத்தினை சீர்குலைக்கும் முயற்சிக்கு எதிரான விழிப்புணர்வு

valiwest01அண்மையில் வலி மேற்கு பிரதேசத்திற்கு உடபட்ட பாடசாலை மாணவர்களை இணைத்து போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையை வடமாகாண நல்லொழுக்க சம்மேளனம் நடாத்தியது. இவ் நிகழ்வானது சித்தன்கேணி சிவன்தேவஸ்தான முன்றலில் ஆரம்பித்து சங்கானை மத்திய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து பிரமுகர்கள் பலரும் உரையாற்றினர். இவ் நிகழ்வில் கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில் Read more

 உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை!- வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல்

tamilஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை. கடந்த கால அனுபவங்களே இந்த நிலைப்பாட்டுக்கு காரணம்.
இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படுவதை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் இவ்வாறான கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், அதற்கிடையில் அமெரிக்கா இப்படியான நிலைப்பாட்டை எடுத்திருப்பது கவலையளிப்பதாகவும்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் வெற்றியளிக்கவில்லை.
சர்வதேச பிரதிநிதிகளின் கண்காணிப்பில் உள்நாட்டில் நடந்துள்ள விசாரணை ஆணைக்குழுக்கள் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் வழங்கவில்லை
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமலில் உள்ள சூழ்நிலையில், பெருமளவிலான அரசியல் கைதிகள் இன்னும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும். 
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் பிபிசியிடம் தெரிவித்தார். 

இரண்டு கட்சிகள் மாத்திரம் சேர்ந்து அமைப்பது தேசிய அரசாங்கமாகுமா? மனோ கணேசன்

manoஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கூட்டிணைவது மாத்திரம் தேசிய அரசாங்கம் ஆகிவிட முடியாது. தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய இடங்கள் வழங்கப்பட்டால்தான் இது தேசிய அல்லது தேசிய ஐக்கிய அரசாங்கமாக முடியும்.

அதேபோல் எப்பாடுபட்டாவது அமைச்சு பதவிகளை கைப்பற்றிகொள்வது என்பது தேசிய அரசாங்கத்தின் முன்னுரிமை பட்டியலில் முதலிடம் பிடிக்க முடியாது. இது தேசிய அரசாங்கமாக அழைக்கப்படலாம்.

ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து கொண்டால்தான், இது தேசிய ஐக்கிய அரசாங்கமாக முடியும். இங்கே சிலர் தேசிய அரசாங்கம், தேசிய ஐக்கிய அரசாங்கம் ஆகிய இரண்டு சொற்களையும் போட்டு குழப்புகிறார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். Read more