வடக்கில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனத்தில் அநீதி-(படம் இணைப்பு)
விவசாய கமநல சேவைத் திணைக்களத்தின் கீழுள்ள பதவிகளுள் ஒன்றான விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களாக 365பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கிலே இருக்கின்ற விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் இவர்களுள் 29பேர் மாத்திரமே தமிழர்களாவர். மிகுதி 336பேருமே தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர்களாவர். அதாவது இவர்கள் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை கண்டி மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
தமிழ்மொழி தெரியாத இவர்களுக்கு இங்கு நியமனம் வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானதாக அமையாது. இதற்கான பரீட்சைகள் நடாத்தப்பட்டு தேசிய அடிப்படையிலான வெட்டுப்புள்ளிகள் ஊடாக இவர்களைத் தெரிவுசெய்திருப்பதன் காரணமாக இதற்கு தெரிவான தமிழர்களின் தொகை மிகவும் குறைவாகவுள்ளது. அத்துடன் நியமிக்கப்பட்டிருக்கும் சிங்களவர்கள் இங்கு நிரந்தமாக இருக்கப்போவதில்லை. இவர்கள் நியமனம் பெற்றுக்கொண்டு தங்கள் பிரதேசங்களுக்கு மாற்றலாகிச் சென்றுவிடுவார்கள். Read more