Header image alt text

பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் நான்கு இராணுவ அதிகாரிகள் கைது-

prageethஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பில் நான்கு இராணுவ அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்தி இணையத்தளமொன்றில் சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட்ட பிரகீத் எக்னெலிகொட 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்தார் அதன் பின்னர் இதுவரை அவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தின் லெப்டினன் கேர்ணல்கள் இருவரும், அலுவலக சார்ஜனும், கோப்ரல் ஒருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சில மணிநேரம் அவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளை அடுத்தே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

என்றும் நன்றிகள் பல-

Posted by plotenewseditor on 25 August 2015
Posted in செய்திகள் 

என்றும் நன்றிகள் பல-

P1060864நடைபெற்று முடிவடைந்த 2015ம் ஆண்டின் பாராளுமண்றப் பொதுத் தேர்தலின்போது எமது பிரதேசத்தில் தழிழ் தேசிய கூட்டமைப்பின் அதி உயர்ந்த வெற்றிக்கு வாக்களித்த அனைத்து தழிழ் தேசிய உறவுளுக்கும் தேசியத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். யுத்தத்தின் வடுக்கள் மாறாத நிலையில் சலுகைகளை வழங்கி கடந்த கால நிகழ்வுகளை இருட்டடிப்புச செய்து எங்கள் மக்களின் வாக்கு வங்கிகளை சூறையட வந்த கயவர்களின் கூடாரங்களை நிர்மூலமாக்கி உரிமைக்காக அன்றுபோல் என்றும் நாம் தயார் என்பதனை உலகறியச் செய்து தழிழ் தேசியததின் வழியில் தடம் பதித்து தலைவனின் வழி நடக்க வழிசமைத்த அன்பினும் உயரிய உறவுகளுககு என்றும் நன்றி கூறுவதோடு என்றும் உங்கள் ஆணைப்படி உங்கள் தழிழ் தேசிய கூட்டமைப்பு வழி நடக்கும் என்ற உறுதியுடன் நன்றி கூறுகின்றேன்.

என்றும் தழிழ் அன்னையின் புதல்வியாய்
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் முன்னாள் தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை.

அராலி உப அலுவலகத்தில் நூலகக் கண்காட்சி ஆரம்பித்து வைப்பு-(படங்கள் இணைப்பு)

P1060924யாழ். வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட அராலி உப அலுவலகத்தில் பாடசாலை மாணவர்களுக்கன நூலகக் கண்காட்சியினை வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் ஏராளமான பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வில் மாணவர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

Read more