வட்டு மத்திய கல்லூரி மாணவர்களது போராட்டத்தின்போது தாக்குதல்-

IMG_7176யாழ். வட்டு மத்திய கல்லூரி மாணவர்களால் அதிபர் இடமாற்றத்தை கண்டித்து நடாத்தப்படும் போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்றைய போராட்டத்தின்போது புதிதாக இடமாற்றம் பெற்று வந்த அதிபரின் சகோதரரால் இன்று பெற்றோர் ஒருவர் தாக்கப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தம்பையா கதிர்காமதம்பி என்பவரே புதிய அதிபரின் சகோதரரால் பொலிஸார் முன்னிலையில் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இவரை தாக்கிய நபர் பாடசாலை அதிபரின் காரியாலயத்தில் இருந்தே வந்து தாக்கியதாகவும், இந்த நபர் தாக்கப்பட்ட சமயம் கல்லூரி அதிபருடன் வலயக் கல்விப்பணிப்பாளரும் அலுவலகத்தில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

IMG_7176p2 p6