வட்டு இந்து வாலிபர் சங்கம் வாழ்வாதார உதவி-(Photoes)

l4யாழ். நவாலி வடக்கு மானிப்பாயில் வசிக்கும் சுரேன் என்பவர் வன்னி இறுதி யுத்தத்தின்போது தனது இடது கண்ணையும் இடது கையையும் இழந்துள்ளார். இவர் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினருடன் தொடர்பு கொண்டு தனது வாழ்வாதாரமான தச்சுத் தொழில் செய்வதற்கு 30,000 ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்வனவு செய்து தரும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு 30,000 ரூபா பெறுமதியான பொருட்கள் இன்று சங்க காரியாலத்தில் வைத்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப் பொருட்களை முன்னாள் சங்க உறுப்பினர் தேவராஜன் அவர்கள் வழங்கி வைத்துள்ளார். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

l4l5